Dr. ஷேக் முபாரக் மதனி

மரணித்தவர்களுக்காக குர்ஆனை ஓதி அதன் நன்மையை ஹதியா செய்யலாமா?

குர்ஆன் ஹதியா மரணம் ஈஸால் தவாப்

← முந்தையஅடுதது →
கேள்வி
மரணித்தவர்களுக்காக குர்ஆனை ஓதி அதன் நன்மையை ஹதியா செய்யலாமா?
பதில்
பதில்:

ஒருவர் மரணித்துவிட்டால், அவருக்கு என்ன வழிகளில் நன்மை போய்ச் சேரும் என்பதில், உயிரோடு இருக்கிறவர் துஆ செய்தால் அந்த துஆவின் பலன் கிடைக்கும் என்பதிலும், சதக்கா (தர்மம்) செய்தால் அதன் நன்மை போய்ச் சேரும் என்பதிலும் அறிஞர்கள் மத்தியில் எவ்விதக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால், இது அல்லாத ஏனைய வழிகளில், குறிப்பாக குர்ஆனை ஓதி அந்த நன்மையை ஹதியா (அன்பளிப்பு) செய்தால் அது போய்ச் சேருமா என்பதில் இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருக்கிறது.

இதிலே மிகச் சரியான, குர்ஆன் சுன்னா ஆதாரங்களோடு ஒத்துவரக்கூடிய கருத்து என்னவென்றால், குர்ஆன் ஓதினால் அந்த நன்மை போய்ச் சேராது என்பதுதான். ஏனென்றால், அல்லாஹுத்தஆலா சூரத்துந் நஜ்மில் (53:39) "ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் தேடியதுதான் கிடைக்கும்" என்று பொது விதியைக் கூறுகிறான். இந்தப் பொது விதியிலிருந்து விதிவிலக்கு பெற வேண்டுமானால் அதற்கு ஆதாரம் வேண்டும். துஆ செய்தால் அல்லது சதக்கா செய்தால் நன்மை சேரும் என்பதற்கு ஹதீஸ்களிலும் குர்ஆனிலும் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், குர்ஆன் ஓதினால் அதனுடைய நன்மை போய்ச் சேரும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது என்கிற காரணத்தினால், குர்ஆன் ஓதி நன்மையை ஹதியா செய்வது என்பது மார்க்கத்தில் உள்ளதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →