Dr. ஷேக் முபாரக் மதனி

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனையும் சுன்னாவையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?

குர்ஆன் ஹதீஸ் சஹாபாக்கள் அல்லாஹ்

← முந்தையஅடுதது →
கேள்வி
இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனையும் சுன்னாவையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்?
பதில்
பதில்:

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆனையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் புரிந்துகொள்வதில் தான் உலகத்தில் பல்வேறு வழிகேடுகள் தோன்றியுள்ளன. கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், காதியானிகள் போன்ற வழிகெட்ட பிரிவினரும் குர்ஆன், ஹதீஸை ஆதாரமாகக் காட்டித்தான் தங்கள் கொள்கைகளைப் பரப்பினர். எனவே, குர்ஆனையும் ஹதீஸையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், ஸஹாபாக்கள் (நபித்தோழர்கள்) அதைப் புரிந்துகொண்ட அடிப்படையில் நாமும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏனெனில், குர்ஆன் அருளப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்களே. அவர்களுக்கு அர்த்தங்கள் புரியாத நேரங்களில் நபிகளாரை அணுகி விளக்கம் பெற்றுள்ளனர். கவாரிஜ்கள் குர்ஆன், ஹதீஸை தவறாகப் புரிந்து வழிகெட்டபோது, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சென்று, "நான் நபித்தோழர்கள் மத்தியிலிருந்து வந்துள்ளேன்; உங்களில் யாரும் நபித்தோழர்கள் கிடையாது. நீங்கள் குர்ஆன் ஹதீஸைப் புரிந்து கொண்டது தவறு, ஸஹாபாக்கள் புரிந்து கொண்ட முறையே சரி" என்று விளக்கியபோது அவர்களில் பலர் திருந்தி மீண்டனர்.

சிலர் சூரத்துல் ஃபுர்கானில் உள்ள (25:73) வசனத்தைக் காட்டி, குர்ஆன் ஹதீஸை நமது அறிவுக்கு எட்டும்படி ஆய்வு செய்துதான் நம்ப வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் அந்த வசனத்தின் உண்மையான விளக்கம், "இபாதூர் ரஹ்மான்களிடம் இறைவசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் குருடர்கள், செவிடர்களைப் போன்று அதைப் புறக்கணிக்காமல் முழுமையாகக் கட்டுப்படுவார்கள்" என்பதேயாகும். எனவே, குர்ஆனையும் ஹதீஸையும் ஸஹாபாக்களின் விளக்கத்தின் அடிப்படையிலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

← முந்தையஅடுதது →