Dr. ஷேக் முபாரக் மதனி

அறஃபா நோன்பை ஹாஜிகள் அறஃபாவில் கூடும் நாளில் நோற்க வேண்டுமா அல்லது துல்ஹஜ் பிறை 9-ல் நோற்க வேண்டுமா?

அறஃபா நோன்பு துல்ஹஜ் 9 ஹாஜிகள் இஜ்திஹாத்

← முந்தையஅடுதது →
கேள்வி
அறஃபா நோன்பை ஹாஜிகள் அறஃபாவில் கூடும் நாளில் நோற்க வேண்டுமா அல்லது துல்ஹஜ் பிறை 9-ல் நோற்க வேண்டுமா?
பதில்
பதில்:

அறஃபா நோன்பை நோற்பது சுன்னத் என்பதில் பெரும்பாலான அறிஞர்கள் ஏகோபித்துள்ளனர். இந்த நோன்பை எப்போது நோற்பது என்பதைப் பொறுத்தவரையில் அறிஞர்களிடையே இரண்டு கருத்துக்கள் காணப்படுகின்றன. முதலாவது, அறஃபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் நாளில் தான் நோற்க வேண்டும் என்ற கருத்து. இரண்டாவது, அவரவர் பகுதிகளில் துல்ஹஜ் பிறை 9-ஆம் நாளில் நோற்க வேண்டும் என்ற கருத்து. இது இஜ்திஹாதுக்குரிய (ஆய்வுக்குரிய) ஒரு விஷயமாகும். இதில் எந்த முடிவைப் பின்பற்றி அமல் செய்தாலும் அல்லாஹ் கூலியை வழங்குவான்.

நவீன கால அறிஞர்களில் ஷைக் பின் பாஸ் (ரஹ்) அவர்கள் இடத்தை மையமாக வைத்து ஹாஜிகள் கூடும் நாளில் நோற்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் காலத்தை மையமாக வைத்து பிறை 9-ல் நோற்க வேண்டும் என்கிறார்கள். ஷைக் உஸைமீன் (ரஹ்) அவர்களின் கருத்தே நடைமுறைக்கு மிகவும் பொருத்தமானதாகத் தென்படுகிறது. ஏனெனில், சவூதி அரேபியாவிற்கு முன்னர் பிறை கண்ட நாடுகளில், சவூதியில் ஹாஜிகள் அறஃபாவில் கூடும் நாள் பெருநாள் தினமாக அமையலாம். உதாரணமாக, 1939-ஆம் ஆண்டு எகிப்தில் சவூதிக்கு ஒரு நாள் முன்னதாகவே பிறை காணப்பட்டது; சவூதியில் அறஃபா தினமாக இருந்த நாள் எகிப்தில் பெருநாள் தினமாக அமைந்தது. பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும்.

எனவே, நடைமுறைச் சாத்தியத்தை அடிப்படையாகக் கொண்டு, ஷைக் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறுவது போல, காலத்தை அடிப்படையாக வைத்து அவரவர் பகுதிகளில் எது துல்ஹஜ் பிறை 9-ஆக அமைகிறதோ அந்த நாளிலேயே அறஃபா நோன்பை நோற்றுக் கொள்வது மிகவும் பொருத்தமானதாகும்.

← முந்தையஅடுதது →