கேள்வி
உழ்ஹிய்யா (குர்பானி) கொடுப்பதற்காக கடன் வாங்கலாமா?
பதில்
பதில்:
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும் (சுன்னத் முஅக்கதா). வசதியுள்ளவர்கள் இதை நிறைவேற்றுவது அவசியமாகும். உழ்ஹிய்யா கொடுப்பதற்கு ஒருவரிடம் தற்போதைக்கு பணம் இல்லை, ஆனால் கடன் வாங்கினால் அதை விரைவில் அடைத்து விட முடியும் என்ற உறுதியான நம்பிக்கையும் வழியும் இருந்தால், அவர் கடன் வாங்கியாவது உழ்ஹிய்யா கொடுப்பது சிறந்தது என்று இமாம் இப்னு தைமியா (ரஹ்) போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையும் வாய்ப்பும் உள்ளவர்கள் இவ்வாறு கடன்பட்டு உழ்ஹிய்யா கொடுப்பதில் எவ்விதத் தடையுமில்லை. ஆனால், கடனை அடைக்க வழியில்லாதவர்கள் இதற்காக கடன் வாங்குவது மார்க்கத்தில் அவசியமற்றதாகும்.