முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
IFT
மன்னர் பஹத் (சவூதி)
1
اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۟ۙ
முஹம்மது ஜான்
பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது-
அப்துல் ஹமீது பாகவி
(பூகம்பத்தால்) பூமி பலமாக அசைக்கப்படும்போது,
IFT
பூமி, முழுபலத்துடன் உலுக்கப்படும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அசைக்கப்பட்டுவிடும்போது-
2
وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
அப்துல் ஹமீது பாகவி
அது, தான் சுமந்திருப்பவற்றை (எல்லாம் வெளியில்) எறிந்துவிடும் சமயத்தில்,
IFT
மேலும் பூமி தன்னுள்ளிருக்கும் சுமைகள் அனைத்தையும் வெளிக்கொணர்ந்து விடும்போது,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், பூமி, தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது,
3
وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۟ۚ
முஹம்மது ஜான்
“அதற்கு என்ன நேர்ந்தது?” என்று மனிதன் கேட்கும் போது-
அப்துல் ஹமீது பாகவி
மனிதன் (திடுக்கிட்டு) ‘இதற்கென்ன நேர்ந்தது' (ஏன் இவ்வாறு அசைக்கப்பட்டது?) என்று கேட்பான்.
IFT
மேலும், “அதற்கு என்ன நேர்ந்துவிட்டது?” என்று மனிதன் கேட்கும்போது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் மனிதன், (திடுக்கிட்டு) “இதற்கென்ன நேர்ந்தது?” என்று கூறிவிடும்போது,
4
یَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۟ؕ
முஹம்மது ஜான்
அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் அது, தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் அறிவித்து விடும்.
IFT
அந்நாளில் அது தன் மீது நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்-
5
بِاَنَّ رَبَّكَ اَوْحٰی لَهَا ۟ؕ
முஹம்மது ஜான்
(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறிவித்ததனால்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறே) உமது இறைவன் வஹ்யி மூலம் (தனக்கு) கட்டளையிட்டிருக்கிறான் என்று கூறும்.
IFT
ஏனெனில், உம் இறைவன் அதற்கு (அவ்வாறு எடுத்துரைக்கும்படி) ஆணையிட்டிருப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக உமதிரட்சகன் (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு (க்கட்டளையிட்டு) வஹீமூலம் அறிவித்ததன் காரணமாக!
6
یَوْمَىِٕذٍ یَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ۬ لِّیُرَوْا اَعْمَالَهُمْ ۟ؕ
முஹம்மது ஜான்
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
IFT
அன்று மக்கள் பல்வேறு நிலைமைகளில் திரும்புவார்கள், தங்களுடைய செயல்கள் தங்களுக்குக் காண்பிக்கப்படுவதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு பூமி அசைக்கப்பட்டு அதன் வயிற்றினுள் உள்ளதை வெளியாக்கிவிடும்) அந்நாளில் மனிதர்கள்,அவர்களின் செயல்கள் (அவர்களுக்குக்) காண்பிக்கப்படுவதற்காக பல பிரிவினர்களாக(மண்ணறைகளிலிருந்து) புறப்பட்டு வருவார்கள்.
7
فَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَیْرًا یَّرَهٗ ۟ؕ
முஹம்மது ஜான்
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
IFT
பிறகு, எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன்பய)னைக் கண்டு கொள்வார்.
8
وَمَنْ یَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا یَّرَهٗ ۟۠
முஹம்மது ஜான்
அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான்.
IFT
மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக் கண்டுகொள்வான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் ஓர் அணுவளவு தீமையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன் கேடி)னைக் கண்டு கொள்வார்.