النبأ
ஸூரா 78 — அந்நபா | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
40 வசனங்கள் · ஜுஸ் 30
1
عَمَّ یَتَسَآءَلُوْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் (தங்களுக்குள்) கேட்டுக் கொள்கின்றனர்?
IFT
இவர்கள் எதனைக் குறித்து வினவிக் கொள்கின்றார்கள்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
2
عَنِ النَّبَاِ الْعَظِیْمِ ۟ۙ
முஹம்மது ஜான்
மகத்தான அச்செய்தியைப் பற்றி,
அப்துல் ஹமீது பாகவி
மகத்தான செய்தியைப் பற்றிய(ல்லவா)!
IFT
அந்த மாபெரும் செய்தியைக் குறித்தா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மகத்தான அச்செய்தியைப்பற்றி.
3
الَّذِیْ هُمْ فِیْهِ مُخْتَلِفُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
அப்துல் ஹமீது பாகவி
அதைப்பற்றி அவர்கள் (உண்மைக்கு) முரணான அபிப்பிராயம் கொண்டிருக்கின்றனர்.
IFT
அதைப்பற்றி இவர்கள் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(ம்மகத்தான செய்தியான)து எத்தகையதென்றால் அவர்கள் அதில்(தான்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.
4
كَلَّا سَیَعْلَمُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.
IFT
ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்து விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறல்ல! (அல்லாஹ் - காஃபிர்களை என்ன செய்வான் என்பதை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
5
ثُمَّ كَلَّا سَیَعْلَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவசியம் அதிசீக்கிரத்தில் (அதன் உண்மையை) நன்கு அறிந்து கொள்வார்கள்.
IFT
ஆம்; ஒருபோதுமில்லை! வெகு விரைவில் அவர்களுக்குத் தெரிந்துவிடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவ்வாறல்ல! (விசுவாசிகள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டதன் பலனை) அறிந்து கொள்வார்கள.
6
اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۟ۙ
முஹம்மது ஜான்
நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வளவு பெரிய) பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக அமைக்க வில்லையா?
IFT
நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக ஆக்கவில்லையா?
7
وَّالْجِبَالَ اَوْتَادًا ۟
முஹம்மது ஜான்
இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், (அதில் நாம்) மலைகளை முளைகளாக (நிறுத்தவில்லையா?)
IFT
மேலும், மலைகளை முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மலைகளையும் முளைகளாக (நாம் அமைக்கவில்லையா?)
8
وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
ஜோடி ஜோடியாக உங்களை நாமே படைத்திருக்கிறோம்.
IFT
மேலும், உங்களை (ஆண்பெண் எனும்) இணைகளாக நாம் படைக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் உங்களை (ஆண், பெண் கொண்ட) ஜோடிகளாக நாம் படைத்தோம்.
9
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாமே உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்.
IFT
மேலும், உங்கள் உறக்கத்தை அமைதியளிக்கக் கூடியதாய் நாம் ஆக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் உங்களுடைய தூக்கத்தை (உங்களுக்கு) இளைப்பாறுதலாகவும் ஆக்கினோம்.
10
وَّجَعَلْنَا الَّیْلَ لِبَاسًا ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாமே இரவை (உங்களுக்கு)ப் போர்வையாக ஆக்கினோம்.
IFT
மேலும், நாம் இரவை மூடிக்கொள்ளக்கூடியதாய் ஆக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் இரவை (உங்களுக்கு) ஆடையாகவும் ஆக்கினோம்.
11
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا ۪۟
முஹம்மது ஜான்
மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாமே பகலை (உங்கள்) வாழ்வைத் தேடிக்கொள்ளும் நேரமாக்கினோம்.
IFT
மேலும், நாம் பகலை வாழ்க்கைத் தேவைகளைத் தேடிடும் நேரமாக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம் பகலை வாழ்க்கைக்குரிய(வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக ஆக்கினோம்.
12
وَّبَنَیْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۟ۙ
முஹம்மது ஜான்
உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கு மேலிருக்கும் பலமான ஏழு வானங்களையும் நாமே அமைத்தோம்.
IFT
மேலும், உங்களுக்கு மேலே உறுதியான ஏழு வானங்களை நாம் அமைக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு மேல் உறுதியான (வானங்கள்) ஏழினை நாமே உண்டாக்கினோம்.
13
وَّجَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۟
முஹம்மது ஜான்
ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் (சூரியனைப்) பிரகாசிக்கும் தீபமாக அமைத்தோம்.
IFT
மேலும், அதிக வெப்பமும் ஒளியும் கொண்ட விளக்கையும் நாம் படைக்கவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வெப்பமும் ஒளியும் கலந்த) பிரகாசிக்கும் ஒரு விளக்கையும் (சூரியனை) ஆக்கினோம்.
14
وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
கார்மேகத்திலிருந்து பெரும் மழையை பொழியச் செய்கிறோம்.
IFT
மேலும், கார்முகில்களிலிருந்து மழையை நாம் பொழியச் செய்யவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கார் மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் (மழை) நீரையும் இறக்கி வைத்தோம்.
15
لِّنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۟ۙ
முஹம்மது ஜான்
அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
அப்துல் ஹமீது பாகவி
அதைக் கொண்டு தானியங்களையும் புற்பூண்டுகளையும் முளைப்பிக்கிறோம்.
IFT
தானியங்களையும் தாவரங்களையும் மற்றும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனைக் கொண்டு தானியத்தையும், தாவரத்தையும் நாம் வெளிப்படுத்துவதற்காக-
16
وَّجَنّٰتٍ اَلْفَافًا ۟ؕ
முஹம்மது ஜான்
(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
அப்துல் ஹமீது பாகவி
இன்னும், கிளைகள் அடர்ந்த சோலைகளையும் (உற்பத்தி செய்கிறோம்).
IFT
அடர்ந்த தோட்டங்களையும் உருவாக்குவதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அடர்ந்த மரங்களுள்ள சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக)-
17
اِنَّ یَوْمَ الْفَصْلِ كَانَ مِیْقَاتًا ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (இவர்கள் தர்க்கித்து நிராகரித்துக் கொண்டிருக்கும்) அந்தத் தீர்ப்பு நாள்தான் (விசாரணைக்குக்) குறிப்பிட்ட காலமாகும்.
IFT
திண்ணமாக, தீர்ப்புநாள் நிர்ணயிக்கப்பட்ட ஒரு நேரமாய் இருக்கின்றது;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, தீர்ப்புநாள் நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.
18
یَّوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۟ۙ
முஹம்மது ஜான்
ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்காக) ஸூர் (என்னும் எக்காளம்) ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்.
IFT
(சூர்) எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக(க் கிளம்பி) வருவீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸூர் (குழல்) ஊதப்படும் நாளன்று நீங்கள் கூட்டம் கூட்டமாக (கேள்வி கணக்கு நடக்கும் திறந்த வெளிக்கு) வருவீர்கள்.
19
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
வானம் திறக்கப்பட்டு (அதில்) பல வழிகள் ஏற்பட்டு விடும்.
IFT
மேலும், வானம் திறந்துவிடப்படும்; இறுதியில் அது வாயில்கள் மயமாகி விடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானமும் திறக்கப்பட்டு, பின்னர் பல வாசல்களாக அது ஆகிவிடும்.
20
وَّسُیِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ۟ؕ
முஹம்மது ஜான்
மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
அப்துல் ஹமீது பாகவி
மலைகள் (தம் இடத்திலிருந்து) பெயர்க்கப்பட்டு தூள்தூளாகி (பறந்து) விடும்.
IFT
மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும். அப்பொழுது அவை கானலாய்ப் போய்விடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மலைகளும் (இடம்) பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
21
اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நரகம் (இந்தப் பாவிகளின் வரவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
IFT
திண்ணமாக, நரகம் பதுங்கித் தாக்கக்கூடியதாய் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடமாக உள்ளது-
22
لِّلطَّاغِیْنَ مَاٰبًا ۟ۙ
முஹம்மது ஜான்
வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக.
அப்துல் ஹமீது பாகவி
(பாவிகளாகிய) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் அதுவே.
IFT
வரம்பு மீறியவர்களுக்கான இருப்பிடமாக உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக (ஆவதற்காக)-
23
لّٰبِثِیْنَ فِیْهَاۤ اَحْقَابًا ۟ۚ
முஹம்மது ஜான்
அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் அவர்கள் நீண்ட காலங்கள் தங்கிவிடுவார்கள்.
IFT
அதில் அவர்கள் பல யுகங்கள் வீழ்ந்து கிடப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்கள் பல யுகங்கள் தங்குபவர்களாக இருக்கும் நிலையில்-
24
لَا یَذُوْقُوْنَ فِیْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۟ۙ
முஹம்மது ஜான்
அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
IFT
அங்கு குளுமையையோ, குடிப்பதற்கேற்ற எந்த ஒரு பொருளின் சுவையையோ அவர்கள் சுவைக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதில் அவர்கள் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்.
25
اِلَّا حَمِیْمًا وَّغَسَّاقًا ۟ۙ
முஹம்மது ஜான்
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
அப்துல் ஹமீது பாகவி
அதில் கொதிக்கும் நீரையும் சீழ் சலத்தையும் தவிர அவர்கள் (வேறு ஒரு) குடிபானத்தையும், குளிர்ச்சியையும் சுவைக்க மாட்டார்கள்.
IFT
கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முடிவுறக் காய்ச்சப்பட்ட (கொதி) நீரையும் (நரகவாசிகளின் உடலிலிருந்து வடிந்து கொண்டிருக்கும்) சீழையும் தவிர,
26
جَزَآءً وِّفَاقًا ۟ؕ
முஹம்மது ஜான்
(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
அப்துல் ஹமீது பாகவி
இது (அவர்கள் செயலுக்குத்) தகுமான கூலியாகும்.
IFT
(இவை அவர்களின் இழிசெயல்களுக்கு) ஏற்ற கூலிதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது அவர்கள் செயலுக்கு) ஒத்த கூலியாக
27
اِنَّهُمْ كَانُوْا لَا یَرْجُوْنَ حِسَابًا ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் (மறுமையின்) கேள்வி கணக்கை நம்பவே இல்லை.
IFT
அவர்கள் கேள்விக் கணக்கு கேட்கப்படும் என்பதை நம்பக் கூடியவர்களாய் இருக்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக அவர்கள் (மறுமையின் கேள்வி) கணக்கை நம்பாதவர்களாக இருந்தனர்.
28
وَّكَذَّبُوْا بِاٰیٰتِنَا كِذَّابًا ۟ؕ
முஹம்மது ஜான்
அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் நம் வசனங்களை மிக அலட்சியமாகப் பொய்ப்பித்தார்கள்.
IFT
மேலும், அவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யென முற்றிலும் மறுத்து விட்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நம்முடைய வசனங்களை மிக்க அதிகமாக (முற்றாக) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.
29
وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ كِتٰبًا ۟ۙ
முஹம்மது ஜான்
நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம்.
IFT
அதே நேரத்தில் நாமோ அவர்களின் ஒவ்வொரு விஷயத்தையும் எண்ணி எண்ணி எழுதி வைத்திருந்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஓவ்வொரு பொருளையும், (அது பற்றி நன்கறிந்து) அதை நாம் பதிவுப் புத்தகத்தில் கணக்கிட்டு) எழுதி வைத்திருக்கிறோம்.
30
فَذُوْقُوْا فَلَنْ نَّزِیْدَكُمْ اِلَّا عَذَابًا ۟۠
முஹம்மது ஜான்
“ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மறுமையில் அவர்களை நோக்கி) ‘‘வேதனையைத் தவிர நாம் உங்களுக்கு (வேறெதையும்) அதிகப்படுத்த மாட்டோம். ஆகவே, (இதைச்) சுவைத்துப் பாருங்கள்'' (என்று கூறுவோம்).
IFT
“இதோ, சுவையுங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறெதனையும் நாம் அதிகமாக்கவே மாட்டோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே சுவையுங்கள், வேதனையைத் தவிர (வேறெதனையும்) உங்களுக்கு நாம் அதிகப்படுத்தவே மாட்டோம்” (என்று கூறப்படும்).
31
اِنَّ لِلْمُتَّقِیْنَ مَفَازًا ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(ஆயினும்), இறையச்சமுடையவர்களுக்கோ நிச்சயமாக பாதுகாப்பான (சொர்க்கம் என்னும்) இடம் உண்டு.
IFT
திண்ணமாக, இறையச்சமுள்ளவர்களுக்கு வெற்றியளிக்கும் ஓர் இடம் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக பயபக்தியுடையோருக்கு (நரகிலிருந்து விடுபட்டு சுவனம் செல்லும்) வெற்றி உண்டு.
32
حَدَآىِٕقَ وَاَعْنَابًا ۟ۙ
முஹம்மது ஜான்
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
அப்துல் ஹமீது பாகவி
(அங்கு வசிப்பதற்கு) தோட்டங்களும் (அவற்றில் புசிப்பதற்கு அவர்களுக்கு) திராட்சைக் கனிகளும் உண்டு.
IFT
“தோட்டங்களும் திராட்சைகளும்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
தோட்டங்களும், திராட்சைகளும் (உண்டு)
33
وَّكَوَاعِبَ اَتْرَابًا ۟ۙ
முஹம்மது ஜான்
(மனைவிகளாக) சம வயதுள்ள கன்னிகளும்.
அப்துல் ஹமீது பாகவி
(மனைவிகளாக) ஒரே வயதுடைய (கண்ணழகிகளான) கன்னிகளும்,
IFT
சமவயதுடைய கன்னிப்பெண்களும்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனைவிகளாக) சம வயதுடைய கன்னிகைகளும் (இருப்பர்)
34
وَّكَاْسًا دِهَاقًا ۟ؕ
முஹம்மது ஜான்
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
அப்துல் ஹமீது பாகவி
(பானங்கள்) நிறைந்த கிண்ணங்களும் (அவர்களுக்குக் கிடைக்கும்).
IFT
நிறைந்த கிண்ணமும் உள்ளன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பானங்கள் நிறைந்த கிண்ணங்களும் (உண்டு)
35
لَا یَسْمَعُوْنَ فِیْهَا لَغْوًا وَّلَا كِذّٰبًا ۟ۚ
முஹம்மது ஜான்
அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அங்கு அவர்கள் வீண் வார்த்தையையும் பொய்யையும் செவியுற மாட்டார்கள்.
IFT
அங்கு வீணான பேச்சையோ, பொய்யுரையையோ அவர்கள் கேட்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும், (ஒருவரையொருவர்) பொய்யாக்குவதையும் செவியுறமாட்டார்கள்.
36
جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۟ۙ
முஹம்மது ஜான்
(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(இவையெல்லாம் இவர்களின் நன்மைகளுக்குக்) கணக்கான கூலியாகவும் (கிடைக்கும். அதற்கு மேல்) உமது இறைவன் புறத்தால் நன்கொடையாகவும் (இன்னும் அதிகம்) அவர்களுக்குக் கிடைக்கும்.
IFT
இது உம்முடைய அதிபதியிடமிருந்து கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவை) உமது இரட்சகனிடமிருந்து நற்கூலியாக, கணக்கான அன்பளிப்பாக (கொடுக்கப்பட்டுள்ளது)
37
رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا الرَّحْمٰنِ لَا یَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا ۟ۚ
முஹம்மது ஜான்
(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே வானங்கள், பூமி, இவற்றுக்கு மத்தியிலுள்ள அனைத்தின் உரிமையாளனும் அளவற்ற அருளாளனும் ஆவான். எனினும், (அந்நாளில் எவருமே) அவன் முன் பேச சக்தி பெறமாட்டார்கள்.
IFT
வானங்கள் மற்றும் பூமிக்கும் அவற்றிற்கிடைப்பட்ட ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அந்தக் கருணை மிக்க இறைவனிடமிருந்து (கிடைத்த கூலியும் போதிய வெகுமதியுமாகும்). அவனுக்கு முன்னால் பேசுவதற்கு யாருக்கும் திராணி இல்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவனே) வானங்கள் மற்றும் பூமி இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கும் இரட்சகன்; (அவனே) அளவற்ற அருளாளன்; அவன்முன் அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
38
یَوْمَ یَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓىِٕكَةُ صَفًّا ۙۗؕ لَّا یَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا ۟
முஹம்மது ஜான்
ரூஹு (என்ற ஜிப்ரீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
அப்துல் ஹமீது பாகவி
ஜிப்ரயீலும், வானவர்களும் அணி அணியாக நிற்கும் அந்நாளில், எவருமே அவன் முன் பேச (சக்தி பெற) மாட்டார்கள். எனினும், ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுத்து ‘‘சரி! பேசுவீராக!'' எனவும் கூறினானோ அவர் (மட்டும்) பேசுவார்.
IFT
ரூஹும்* வானவர்களும் அணிவகுத்து நிற்கும் அந்நாளில் எவரும் பேசமாட்டார்; ஆனால், கருணைமிக்க இறைவன் எவருக்கு அனுமதி கொடுப்பானோ அவரையும், நேர்மையைச் சொல்பவரையும் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஜிப்ரீலாகிய) ரூஹும், மலக்குகளும் அணிவகுத்து நிற்கும் நாளில் (மிகக் கிருபையுடையவனாகிய) அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து - இன்னும் சரியானதைக் கூறியிருந்தாரோ அவரைத்தவிர (மற்றெவரும் அவன் முன்) பேசமாட்டார்கள்.
39
ذٰلِكَ الْیَوْمُ الْحَقُّ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ مَاٰبًا ۟
முஹம்மது ஜான்
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
அப்துல் ஹமீது பாகவி
இத்தகைய நாள் (வருவது) உறுதி! ஆகவே, விரும்பியவன் தன் இறைவனிடமே தங்கும் இடத்தைத் தேடிக்கொள்ளவும்.
IFT
அந்நாள் (வருவது) உண்மையாகும். எனவே, நாடியவர் தம்முடைய இறைவனின் பக்கம் மீளும் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நிகழ்ச்சிகள் நடந்தேறும்) அது சத்தியமான நாளாகும், எனவே எவர் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகனிடம் மீளும் பாதையை எடுத்துக் கொள்வாராக.
40
اِنَّاۤ اَنْذَرْنٰكُمْ عَذَابًا قَرِیْبًا ۖۚ۬ یَّوْمَ یَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ یَدٰهُ وَیَقُوْلُ الْكٰفِرُ یٰلَیْتَنِیْ كُنْتُ تُرٰبًا ۟۠
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இரு கைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் “அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!” என்று (பிரலாபித்துக்) கூறுவான்.
அப்துல் ஹமீது பாகவி
சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
IFT
நெருங்கிவிட்டிருக்கும் வேதனை குறித்துத் திண்ணமாக நாம் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டோம். அந்நாளில் மனிதன் தன்னுடைய கைகளால் முன்னர் செய்தனுப்பிய அனைத்தையும் காண்பான். நிராகரித்தவனோ புலம்புவான்: “அந்தோ! நான் மண்ணாய் இருந்திருக்கக்கூடாதா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, சமீபித்துவரும் வேதனையைப் பற்றி நாம் உங்களுக்கு எச்சரிக்கிறோம்; (விசுவாசியான) மனிதர் தன் இருகரங்கள் முற்படுத்தியதைக் (கண்கூடாகக்) காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ (அந்நாளில் “நான் மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே” என்று கூறுவான்.