பாடம்:
بَابُ مَا جَاءَ أَنَّ المُؤْمِنَ يَمُوتُ بِعَرَقِ الجَبِينِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ المُثَنَّى بْنِ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«المُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الجَبِينِ»
وَفِي البَاب عَنْ ابْنِ مَسْعُودٍ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»، وَقَدْ قَالَ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ: «لَا نَعْرِفُ لِقَتَادَةَ سَمَاعًا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ»
இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார் என்பது குறித்து வந்துள்ளவை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர் நெற்றி வியர்க்கும் நிலையிலேயே மரணிப்பார். திர்மிதீ இமாம் கூறுகிறார்: இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இதில் இடம்பெறும் கதாதா (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்களிடமிருந்து (ஹதீஸ்) எதையும் செவியேற்றதாக நாம் அறியவில்லை என சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: புரைதா பின் ஹுஸைப் (ரலி)