حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي سُجُودِ القُرْآنِ بِاللَّيْلِ: «سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் ஸஜ்தா வசனங்களை ஓதி ஸஜ்தாச் செய்யும்போது, “ஸஜத வஜ்ஹீ லில்லதீ கலக்கஹூ, வஷக்க ஸம்அஹூ வ பஸரஹூ பி ஹவ்லிஹீ வ குவ்வத்திஹீ” என்று கூறுவார்கள். (பொருள்: என் முகத்தைப் படைத்து அதில் தனது அறிவாலும் ஆற்றலாலும் செவிப்புலனையும் பார்வைத் திறனையும் ஏற்படுத்திய (இறை)வனுக்கு என் முகம் பணிகிறது.) திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.