← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #255 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
  பாடம்:
بَابُ رَفْعِ اليَدَيْنِ عِنْدَ الرُّكُوعِ حَدَّثَنَا قُتَيْبَةُ، وَابْنُ أَبِي عُمَرَ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ، وَإِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ»، وَزَادَ ابْنُ أَبِي عُمَرَ فِي حَدِيثِهِ: «وَكَانَ لَا يَرْفَعُ بَيْنَ السَّجْدَتَيْنِ». Tirmidhi-Tamil-. Tirmidhi-TamilMisc-. Tirmidhi-Alamiah-.
ருகூவில் (செல்லும் போதும், அதிலிருந்து எழும்போதும்) இருகைகளையும் உயர்த்துதல். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்கு செல்லும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக உயர்த்துவதையும், இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தாமலிருப்பதையும் நான் பார்த்துள்ளேன். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்னு அபூஉமர் அவர்கள், “இரு ஸஜ்தாக்களுக்கிடையில் இவ்வாறு கைகளை உயர்த்தமாட்டார்கள்” என்று கூடுதலாக அறிவித்துள்ளார்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)