← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2333
  பாடம்: 22
بَابُ مَا جَاءَ فِي قِصَرِ الأَمَلِ حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ جَسَدِي فَقَالَ: «كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ أَوْ عَابِرُ سَبِيلٍ وَعُدَّ نَفْسَكَ فِي أَهْلِ القُبُورِ» فَقَالَ لِي ابْنُ عُمَرَ: «إِذَا أَصْبَحْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالمَسَاءِ، وَإِذَا أَمْسَيْتَ فَلَا تُحَدِّثْ نَفْسَكَ بِالصَّبَاحِ، وَخُذْ مِنْ صِحَّتِكَ قَبْلَ سَقَمِكَ وَمِنْ حَيَاتِكَ قَبْلَ مَوْتِكَ فَإِنَّكَ لَا تَدْرِي يَا عَبْدَ اللَّهِ مَا اسْمُكَ غَدًا» وَقَدْ رَوَى هَذَا الحَدِيثَ الأَعْمَشُ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ، نَحْوَهُ. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَحْوَهُ
எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக வந்துள்ளவை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு; உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளரான) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீ காலை நேரத்தை அடைந்தால், மாலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ மாலை நேரத்தை அடைந்தால், காலை நேரத்தை அடைவாய் என எண்ணாதே! நீ நோய்வாய்ப்படுவதற்குமுன் உன் உடல்நலத்தில் சிறிதளவையேனும் (நன்மைக்குப்) பயன்படுத்திக் கொள். உன் இறப்புக்கு முன் ஜீவியத்தில் சிறிதளைவையேனும் (நன்மைக்காக) எடுத்துக்கொள்! ஏனெனில், அல்லாஹ்வின் அடியானே! நாளைக்கு உனது பெயர் என்ன (இறந்த வனா, இருப்பவனா) என்பதை நீ அறிய மாட்டாய்” என்று கூறினார்கள். திர்மிதீ இமாம் கூறுகிறார்: இந்தச் செய்தி இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)