أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ الْأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، لَا يُؤْخَذُ الرَّجُلُ بِجِنَايَةِ أَبِيهِ، وَلَا جِنَايَةِ أَخِيهِ»
قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا خَطَأٌ، وَالصَّوَابُ مُرْسَلٌ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19163- ஷரீக் பின் அப்துல்லாஹ் பற்றி, இவர் நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், அதிகம் தவறிழைப்பவர் என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-2802) இந்த செய்தியின் முதல் பகுதி சரியான அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது. (பார்க்க: புகாரி-6166 இதன் அறிவிப்பாளர் தொடர்களை விரிவாக கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள் அஃமஷ் வழியாக அறிவிக்கும் மற்ற பலமானவர்களான அபூமுஆவியா போன்ற பலர் இந்த செய்தியை முர்ஸலாக-நபித்தோழரை விட்டு அறிவித்துள்ளனர் என்பதால் இது முர்ஸல் என்பதே உண்மை என்று கூறியுள்ளார். (பார்க்க: நஸாயீ-4127 (நூல்: அல்இலலுல் வாரிதா-5/241) மேலும் பார்க்க: புகாரி-6166 Favorite
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)