← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #668 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، فِي هَذَا الْإِسْنَادِ زَادَ قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِقَتَادَةَ: أَسَمِعْتَهُ مِنْ أَنَسٍ قَالَ: نَعَمْ نَحْنُ سَأَلْنَاهُ عَنْهُ Tamil-668 Shamila-399 JawamiulKalim-610
கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ஷுஅபா ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்: நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம், நீங்கள் இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், ஆம். அது குறித்து நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்(டுத் தெரிந்துகொண்)டோம் என்று பதிலளித்தார்கள்.