← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #5736
அத்தியாயம்: 53  பாடம்: 19
18 – بَابُ حَدِيثِ جَابِرٍ الطَّوِيلِ وَقِصَّةِ أَبِي الْيَسَرِ حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، وَمُحَمَّدُ بْنُ عَبَّادٍ – وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ، وَالسِّيَاقُ لِهَارُونَ – قَالَا: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ أَبِي حَزْرَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ، قَبْلَ أَنْ يَهْلِكُوا، فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ، صَاحِبَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَهُ غُلَامٌ لَهُ، مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ، وَعَلَى أَبِي الْيَسَرِ بُرْدَةٌ وَمَعَافِرِيَّ، وَعَلَى غُلَامِهِ بُرْدَةٌ وَمَعَافِرِيَّ، فَقَالَ لَهُ أَبِي: يَا عَمِّ إِنِّي أَرَى فِي وَجْهِكَ سَفْعَةً مِنْ غَضَبٍ، قَالَ: أَجَلْ، كَانَ لِي عَلَى فُلَانِ ابْنِ فُلَانٍ الْحَرَامِيِّ مَالٌ، فَأَتَيْتُ أَهْلَهُ، فَسَلَّمْتُ، فَقُلْتُ: ثَمَّ هُوَ؟ قَالُوا: لَا، فَخَرَجَ عَلَيَّ ابْنٌ لَهُ جَفْرٌ، فَقُلْتُ لَهُ: أَيْنَ أَبُوكَ؟ قَالَ: سَمِعَ صَوْتَكَ فَدَخَلَ أَرِيكَةَ أُمِّي، فَقُلْتُ: اخْرُجْ إِلَيَّ، فَقَدْ عَلِمْتُ أَيْنَ أَنْتَ، فَخَرَجَ، فَقُلْتُ: مَا حَمَلَكَ عَلَى أَنِ اخْتَبَأْتَ مِنِّي؟ قَالَ: أَنَا، وَاللهِ أُحَدِّثُكَ، ثُمَّ لَا أَكْذِبُكَ، خَشِيتُ وَاللهِ أَنْ أُحَدِّثَكَ فَأَكْذِبَكَ، وَأَنْ أَعِدَكَ فَأُخْلِفَكَ، وَكُنْتَ صَاحِبَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكُنْتُ وَاللهِ مُعْسِرًا قَالَ: قُلْتُ: آللَّهِ قَالَ: اللهِ قُلْتُ: آللَّهِ قَالَ: اللهِ قُلْتُ: آللَّهِ قَالَ: اللهِ قَالَ: فَأَتَى بِصَحِيفَتِهِ فَمَحَاهَا بِيَدِهِ، فَقَالَ: إِنْ وَجَدْتَ قَضَاءً فَاقْضِنِي، وَإِلَّا، أَنْتَ فِي حِلٍّ، فَأَشْهَدُ بَصَرُ عَيْنَيَّ هَاتَيْنِ – وَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى عَيْنَيْهِ – وَسَمْعُ أُذُنَيَّ هَاتَيْنِ، وَوَعَاهُ قَلْبِي هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا أَوْ وَضَعَ عَنْهُ، أَظَلَّهُ اللهُ فِي ظِلِّهِ» قَالَ: فَقُلْتُ لَهُ أَنَا: يَا عَمِّ لَوْ أَنَّكَ أَخَذْتَ بُرْدَةَ غُلَامِكَ، وَأَعْطَيْتَهُ مَعَافِرِيَّكَ، وَأَخَذْتَ مَعَافِرِيَّهُ وَأَعْطَيْتَهُ بُرْدَتَكَ، فَكَانَتْ عَلَيْكَ حُلَّةٌ وَعَلَيْهِ حُلَّةٌ، فَمَسَحَ رَأْسِي، وَقَالَ: اللهُمَّ بَارِكْ فِيهِ، يَا ابْنَ أَخِي بَصَرُ عَيْنَيَّ هَاتَيْنِ، وَسَمْعُ أُذُنَيَّ هَاتَيْنِ، وَوَعَاهُ قَلْبِي هَذَا – وَأَشَارَ إِلَى مَنَاطِ قَلْبِهِ – رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: «أَطْعِمُوهُمْ مِمَّا تَأْكُلُونَ، وَأَلْبِسُوهُمْ مِمَّا تَلْبَسُونَ» وَكَانَ أَنْ أَعْطَيْتُهُ مِنْ مَتَاعِ الدُّنْيَا أَهْوَنَ عَلَيَّ مِنْ أَنْ يَأْخُذَ مِنْ حَسَنَاتِي يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ مَضَيْنَا حَتَّى أَتَيْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللهِ فِي مَسْجِدِهِ، وَهُوَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ، فَتَخَطَّيْتُ الْقَوْمَ حَتَّى جَلَسْتُ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ، فَقُلْتُ: يَرْحَمُكَ اللهُ أَتُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَرِدَاؤُكَ إِلَى جَنْبِكَ؟ قَالَ: فَقَالَ بِيَدِهِ فِي صَدْرِي هَكَذَا، وَفَرَّقَ بَيْنَ أَصَابِعِهِ وَقَوَّسَهَا: أَرَدْتُ أَنْ يَدْخُلَ عَلَيَّ الْأَحْمَقُ مِثْلُكَ، فَيَرَانِي ك
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்த நீண்ட ஹதீஸும், அபுல்யஸர் (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும். உபாதா பின் வலீத் பின் உபாதா பின் ஸாமித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நானும் என் தந்தை (வலீத் பின் உபாதா பின் ஸாமித்-ரஹ்) அவர்களும் அன்சாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம், அவர்கள் இறப்பதற்குமுன் (அவர்களிடமுள்ள நபிமொழிக்) கல்வியைக் கற்றுக்கொள்வதற்காகப் புறப்பட்டோம். நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபுல்யஸர் (ரலி) அவர்களையே சந்தித்தோம். அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார். அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது. அபுல்யஸர் (ரலி) அவர்களின் உடலில் போர்வை ஒன்றும் “மஆஃபிர்”எனும் ஊரின் ஆடையொன்றும் இருந்தது. (அதைப் போன்றே) அவர்களுடைய அடிமையின் மீதும் போர்வையொன்றும் “மஆஃபிரீ” ஆடையொன்றும் இருந்தது. அபுல்யஸர் (ரலி) அவர்களிடம் என் தந்தை, “என் தந்தையின் சகோதரரே! நான் தங்களது முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் காண்கிறேனே?” என்று கேட்டார்கள். அதற்கு அபுல்யஸர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆம்; “பனூ ஹராம்” குலத்தைச் சேர்ந்த இன்னாரின் புதல்வர் இன்னார் எனக்குக் கடன் தர வேண்டியிருந்தது. (அதை வசூலிப்பதற்காக) நான் சென்று, அவருடைய வீட்டாருக்கு முகமன் (சலாம்) கூறினேன். பிறகு “அவர் இருக்கிறாரா?”என்று கேட்டேன்.வீட்டார், “இல்லை” என்று விடையளித்தனர். அப்போது பருவவயதை நெருங்கி விட்டிருந்த அவருடைய புதல்வர் ஒருவர் வெளியே வந்தார். அவரிடம் நான், “உன் தந்தை எங்கே?” என்று கேட்டேன். அதற்கு அவர், “உங்களின் குரலைக் கேட்டதும் அவர் என் தாயாரின் கட்டிலுக்கடியில் நுழைந்துகொண்டார்” என்று பதிலளித்தார். உடனே நான், “நீர் எங்கே இருக்கிறீர் என்பதை நான் அறிந்துகொண்டேன். வெளியே வாரும்” என்றேன். அவர் வெளியே வந்தார். நான், “என்னிடமிருந்து ஒளிந்துகொள்ள என்ன காரணம்?” என்று கேட்டேன். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (உண்மையைச்) சொல்லிவிடுகிறேன். உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உங்களிடம் பேசும்போது பொய் சொல்லிவிடுவேனோ, அல்லது உங்களுக்கு வாக்களித்துவிட்டு மாறுசெய்துவிடுவேனோ என்றுதான் அஞ்சினேன். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் நெருக்கடியில் இருக்கிறேன்” என்று கூறினார். நான், “அல்லாஹ்வின் மீதாணையாகவா” என்று கேட்டேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்” என்றார். நான் (மீண்டும்) “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” என்று கேட்டேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாகத்தான்” என்றார். நான் (மறுபடியும்) “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” என்று கேட்டேன். அவர் “அல்லாஹ்வின் மீதாணையாகத் தான்” என்று (மூன்றாவது முறையும்) பதிலளித்தார். பிறகு அவர் தமது (கடன்) பத்திரத்தைக் கொண்டுவந்தார். அதை நான் எனது கையால் அழித்துவிட்டேன். பிறகு “கடனைச் செலுத்துவதற்கு ஏதேனும் கிடைத்தால் எனக்குரிய கடனைச் செலுத்தி விடுங்கள். இல்லாவிட்டால், (கடனைச் செலுத்தாமலிருக்க) உங்களுக்கு அனுமதி உண்டு” என்று கூறிவிட்டேன். பிறகு அபுல்யஸர் (ரலி) அவர்கள் தம் கண்கள்மீது இரு விரல்களை வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: இந்த என்னிரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப் பகுதியில் கையை வைத்து) இந்த உள்ளம் மனனமிட்டது. பின்வருமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் சிரமத்திலிருப்பவருக்கு (அவர் தர வேண்டிய கடனுக்கு) அவகாசம் அளிக்கிறாரோ, அல்லது (கடனைத்) தள்ளுபடி செய்துவிடுகிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருகின்றான். அப்போது நான், “என் தந்தையின் சகோதரரே! நீங்கள் உங்கள் அடிமை அணிந்திருக்கும் போர்வையைப் பெற்றுக்கொண்டு உங்களது “மஆஃபிரீ” ஆடையை அவருக்கு அளித்து விட்டாலோ, அல்லது அவரது “மஆஃபிரீ”ஆடையைப் பெற்றுக்கொண்டு உங்களது போர்வையை அவருக்கு அளித்துவிட்டாலோ உங்களுக்கு ஒரு ஜோடி ஆடையும் அவருக்கு ஒரு ஜோடி ஆடையும் கிடைத்து விடுமே!” என்று கேட்டேன். அப்போது அபுல்யஸர் (ரலி) அவர்கள் (அன்புடன்) என் தலையைத் தடவிவிட்டு, “இறைவா! இ(ச்சிறு)வருக்கு வளம் புரிவாயாக! என் சகோதரரின் புதல்வரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்கள் அடிமைகளான) அவர்களுக்கு நீங்கள் உண்பதிலிருந்து உணவளியுங்கள். நீங்கள் உடுத்துவதிலிருந்தே அவர்களுக்கும் உடை கொடுங்கள்” என்று கூறினார்கள்” என்றார்கள். அதை அவர்கள் கூறியபோது, “என் இவ்விரு கண்களும் பார்த்தன; இவ்விரு காதுகளும் கேட்டன; (தமது இதயப்பகுதியில் கையை வைத்து) இதோ இந்த உள்ளம் அதை மனனமிட்டுக் கொண்டது. இவர் மறுமை நாளில் என் நன்மைகளை எடுத்துக் கொள்வதைவிட இவ்வுலகில் பொருட்களை அவருக்கு நான் கொடுப்பது எனக்குச் சுலபமானதே”என்று சொன்னார்கள். -பிறகு நாங்கள் (இருவரும்) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தமது பள்ளிவாசலில் ஒரே ஓர் ஆடையை போர்த்திக்கொண்டு தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது நான் மக்களைக் கடந்துசென்று அவர்களுக்கும் “கிப்லா”த் திசைக்குமிடையே அமர்ந்துகொண்டேன். அப்போது நான், “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்! தங்களது மேலாடை தங்களுக்கு அருகில் இருக்கவே,ஒரே ஆடையில் தொழுகிறீர்களே?” என்று கேட்டேன். அப்போது அவர்கள் தம் விரல்களை விரித்து, பின்னர் வில் போன்று வளைத்து, இவ்வாறு என் நெஞ்சில் வைத்துப் பின்வருமாறு கூறினார்கள்: உம்மைப் போன்ற விவரமில்லாதவர் என்னிடம் வந்து, நான் எப்படிச் செய்கிறேன் என்று பார்த்துவிட்டு, அதைப் போன்றே அவரும் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். (ஒரு முறை) இந்தப் பள்ளிவாசலில் நாங்கள் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது அவர்களது கையில் “இப்னு தாப்” வகை பேரீச்சமரத்தின் பாளை ஒன்று இருந்தது. அப்போது பள்ளிவாசலின் “கிப்லா”த் திசை சுவரில் காறி உமிழப்பட்டிருந்த சளியைக் கண்டார்கள். உடனே அதை அந்தப் பாளையால் சுரண்டிவிட்டார்கள். பிறகு எங்களை முன்னோக்கி, “உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டும் என விரும்புவார்?” என்று கேட்டார்கள். அதைக் கேட்டு நாங்கள் அஞ்சினோம். பிறகு “உங்களில் யார் தம்மை இறைவன் புறக் கணிக்க வேண்டும் என விரும்புவார்?” என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள் (மறுபடியும்) அஞ்சினோம். பிறகு, “உங்களில் யார் தம்மை இறைவன் புறக்கணிக்க வேண்டுமென விரும்புவார்?” என (மூன்றாவது முறையாகக்) கேட்டார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! இல்லை; எங்களில் எவரும் (அதை விரும்பமாட்டார்)” என்று பதிலளித்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவர் தொழுவதற்காக நின்றால், வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் அவரது முகத்துக்கெதிராக இருக்கின்றான். ஆகவே, அவர் தமது முகத்துக்கெதிரே உமிழ வேண்டாம். வலப் பக்கத்திலும் உமிழ வேண்டாம். (மாறாக) தமக்கு இடப்பக்கத்தில் இடக் காலுக்குக் கீழே உமிழ்ந்து (மண்ணால் மூடிக்)கொள்ளட்டும். (தம்மையும் அறியாமல்) சளி முந்திவிட்டால் தமது ஆடையில் இவ்வாறு உமிழ்ந்துகொள்ளட்டும்” என்று கூறி, ஆடையின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு சேர்த்துக் கசக்கினார்கள். “பிறகு நறுமணக் கலவை ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். உடனே இன்ன குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் எழுந்து, தமது வீட்டாரை நோக்க