17 – بَابُ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعْبُدَ دَوْسٌ ذَا الْخَلَصَةِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ – قَالَ عَبْدٌ: أَخْبَرَنَا، وقَالَ ابْنُ رَافِعٍ: حَدَّثَنَا – عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ، حَوْلَ ذِي الْخَلَصَةِ» وَكَانَتْ صَنَمًا تَعْبُدُهَا دَوْسٌ فِي الْجَاهِلِيَّةِ بِتَبَالَةَ
Tamil-5570
Shamila-2906
JawamiulKalim-5177
பாடம் : 17 “தவ்ஸ்” குலத்தார் “துல்கலஸா” கடவுள் சிலையை வழிபடாதவரை யுக முடிவு நாள் வராது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தவ்ஸ்” குலப்பெண்களின் புட்டங்கள் “துல்கலஸா”வைச் சுற்றி அசையாத வரை யுக முடிவு நாள் வராது. துல்கலஸா என்பது, “தவ்ஸ்” குலத்தார் அறியாமைக்காலத்தில் (யமனிலுள்ள) “தபாலா” எனுமிடத்தில் வழிபட்டுவந்த கடவுள் சிலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. Book : 52