← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #4035
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا بَهْزٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ نَهَى عَنِ الْمُزَفَّتِ وَالْحَنْتَمِ وَالنَّقِيرِ»، قَالَ: قِيلَ لِأَبِي هُرَيْرَةَ: مَا الْحَنْتَمُ؟ قَالَ: «الْجِرَارُ الْخُضْرُ» Tamil-4035 Shamila-1993 JawamiulKalim-3698
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், தார் பூசப்பட்ட பாத்திரம், “ஹன்த்தம்”, பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமெனத் தடை செய்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் “ஹன்த்தம் என்பது என்ன?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “சுட்ட களிமண்ணாலான பச்சைநிறச் சாடிகள்” என்று பதிலளித்தார்கள். Book : 36