← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3693
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ, حَدَّثَنَا بَهْزٌ, حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ, حَدَّثَنَا ثَابِتٌ, عَنْ أَنَسٍ أَنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوا يَقُولُونَ يَوْمَ الْخَنْدَقِ : نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْإِسْلَامِ مَا بَقِينَا أَبَدَا أَوْ قَالَ : عَلَى الْجِهَادِ . شَكَّ حَمَّادٌ . وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : اللَّهُمَّ إِنَّ الْخَيْرَ خَيْرُ الْآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ . Tamil-3693 Shamila-1805 JawamiulKalim-3376
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போர் நாளில் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்கள், “நாங்கள் (எத்தகையோர் எனில்) உயிரோடிருக்கும் காலம்வரை நாங்கள் “இஸ்லாத்தில் நிலைப்போம்” அல்லது “அறப்போர் புரிவோம்” என முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்திருக்கிறோம்” என்று (பாடியபடி) கூறிக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமையின் நன்மையே (நிலையான) நன்மையாகும். ஆகவே, (அதற்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பருள்வாயாக!” என்று (பாடியபடியே) சொன்னார்கள். Book : 32