← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3688
44 – بَابُ غَزْوَةِ الْأَحْزَابِ وَهِيَ الْخَنْدَقُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، قَالَ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ يَنْقُلُ مَعَنَا التُّرَابَ، وَلَقَدْ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ، وَهُوَ يَقُولُ: وَاللهِ لَوْلَا أَنْتَ مَا اهْتَدَيْنَا، وَلَا تَصَدَّقْنَا وَلَا صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، إِنَّ الْأُلَى قَدْ أَبَوْا عَلَيْنَا – قَالَ: وَرُبَّمَا قَالَ: إِنَّ الْمَلَا قَدْ أَبَوْا عَلَيْنَا – إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا، وَيَرْفَعُ بِهَا صَوْتَهُ – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: سَمِعْتُ الْبَرَاءَ، فَذَكَرَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: إِنَّ الْأُلَى قَدْ بَغَوْا عَلَيْنَا Tamil-3688 Shamila-1803 JawamiulKalim-3371
பாடம் : 44 “அஹ்ஸாப்” எனும் அகழ்ப் போர். பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப் போரின்போது (அகழ் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடன் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்றுகொண்டு இருந்தார்கள். மண், அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்துவிட்டிருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக்கொண்டு இருந்தார்கள்: அல்லாஹ்வின் மீதாணை! அல்லாஹ் இல்லாவிட்டால், நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் தர்மமும் செய்திருக்கமாட்டோம் தொழுதிருக்கவுமாட்டோம். எங்கள்மீது அமைதியைப் பொழிவாயாக! இவர்கள் (கூட்டுப் படையினர்) எங்களுக்கு அக்கிரமம் இழைத்துவிட்டனர். சில வேளை இவ்வாறு கூறினார்கள்: இந்தப் பிரமுகர்கள் எங்களை நிராகரித்துவிட்டனர். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் நாங்கள் இடம் தரமாட்டோம். “(நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என) இந்த (இறுதி) வாசகத்தை உரத்த குரலில் கூறிக்கொண்டு இருந்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. – மேற்கண்ட ஹதீஸ் பராஉ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், (“இவர்கள் எங்களை நிராகரித்து விட்டனர்” என்பதற்குப் பகரமாக) “இவர்கள் எங்கள்மீது எல்லை மீறிவிட்டனர்” என்று இடம்பெற்றுள்ளது. Book : 32