← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3652
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «لَا يُقْتَلُ قُرَشِيٌّ صَبْرًا بَعْدَ هَذَا الْيَوْمِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ» Tamil-3652 Shamila-1782 JawamiulKalim-3340
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், “அன்றைய தினம் குறைஷியரில் “அல்ஆஸ்” எனும் பெயர் பெற்றிருந்தவர்களில் முதீஉ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை. அப்போது முதீஉ அவர்களுடைய பெயர் “அல்ஆஸீ” (மாறு செய்பவர்) என்றிருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே “முதீஉ” (கீழ்ப்படிந்தவர்) என்று பெயர் சூட்டினார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது. Book : 32