← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2250
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ النُّمَيْرِيُّ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ مُحْرِمُونَ، وَأَبُو قَتَادَةَ مُحِلٌّ، وَسَاقَ الْحَدِيثَ، وَفِيهِ فَقَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟» قَالُوا مَعَنَا رِجْلُهُ، قَالَ: فَأَخَذَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَهَا. Tamil-2250 Shamila-1196 JawamiulKalim-2073
மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “இஹ்ராம்” கட்டியவர்களாகப் புறப்பட்டோம். நான் “இஹ்ராம்” கட்டாதிருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், “அ(ந்த மாமிசத்)தில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாங்கள், “அதன் கால் எங்களிடம் உள்ளது” என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை வாங்கி உண்டார்கள்” என்றும் இடம் பெற்றுள்ளது. Book : 15