← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2445
حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: «نَشَأْتُ يَتِيمًا، وَهَاجَرْتُ مِسْكِينًا، وَكُنْتُ أَجِيرًا لِابْنَةِ غَزْوَانَ بِطَعَامِ بَطْنِي، وَعُقْبَةِ رِجْلِي، أَحْطِبُ لَهُمْ إِذَا نَزَلُوا، وَأَحْدُو لَهُمْ إِذَا رَكِبُوا، فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الدِّينَ قِوَامًا، وَجَعَلَ أَبَا هُرَيْرَةَ إِمَامًا» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அநாதையாக வளர்ந்தேன்; ஏழையாக ஹிஜ்ரத் செய்தேன். ஃகஸ்வான் அவர்களின் மகளிடம், கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி தங்கியபோது அவர்களுக்காக விறகு சேகரித்தேன்; அவர்கள் பயணமான போது (வாகனங்களுக்கு முன் நடந்து) வழிகாட்டினேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உறுதிப்படுத்தினான்; அபூஹுரைராவை (ஒரு) தலைவராக ஆக்கினான்.