← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #812 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 10  பாடம்: 134
بَابُ السُّجُودِ عَلَى الأَنْفِ حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، قَالَ: حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الجَبْهَةِ، وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ وَاليَدَيْنِ وَالرُّكْبَتَيْنِ، وَأَطْرَافِ القَدَمَيْنِ وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ»
மூக்கு தரையில் படுமாறு ஸஜ்தாச் செய்தல். ‘நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு பாதங்களின் முனைகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் பட்டுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நெற்றியைக் குறிப்பிடும்போது தம் கையால் மூக்கை அடையாளம் காட்டினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)