அத்தியாயம்: 10 பாடம்: 133
بَابُ السُّجُودِ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ حَدَّثَنَا قَبِيصَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ أُمِرَ النَّبِيُّ صلّى الله عليه وسلم أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْضَاءٍ، وَلاَ يَكُفَّ شَعَرًا وَلاَ ثَوْبًا: الجَبْهَةِ، وَاليَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ، وَالرِّجْلَيْنِ
Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தல். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நெற்றி, இரண்டு கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரண்டு கால்கள் ஆகிய ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும், (ஸஜ்தாவில்) தலைமுடியையோ ஆடையையோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாது என்றும் நபி (ஸல்) அவர்கள் (அல்லாஹ்வால்) கட்டளையிடப்பட்டார்கள்.