← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #80 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ رَفْعِ العِلْمِ وَظُهُورِ الجَهْلِ وقَالَ رَبِيعَةُ: «لاَ يَنْبَغِي لِأَحَدٍ عِنْدَهُ شَيْءٌ مِنَ العِلْمِ أَنْ يُضَيِّعَ نَفْسَهُ» حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يُرْفَعَ العِلْمُ وَيَثْبُتَ الجَهْلُ، وَيُشْرَبَ الخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا» Bukhari-Alamiah-. Bukhari-JawamiulKalim-.
கல்வி அகற்றப்படுவதும் அறியாமை வெளிப்படுவதும். ரபீஆ பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்) அவர்கள் சிறிதளவேனும் கல்வியறிவு உள்ள ஒருவர் (அதைப் பயன்படுத்தாமல்) தம்மைப் பாழடித்திடுவது முறையல்ல என்று கூறியுள்ளார்கள். ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும்; அறியாமை நிலைத்து விடுவதும்; மது அருந்தப் படுவதும்; வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி).