← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #6682
அத்தியாயம்: 83
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ القَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي المِيزَانِ، حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ العَظِيمِ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அல்லாஹ்வைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை; அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை ஆகும். (அவை:) 1 . ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி. (அல்லாஹ்வை புகழ்வதோடு அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்). 2 . ஸுப்ஹானல்லாஹில் அழீம். (மகத்தான அல்லாஹ் தூயவன் எனத் துதிக்கிறேன்) அபூஹுரைரா