حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ لَهُ: «ارْكَبْهَا» قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا وَيْلَكَ» فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவரிடம், ‘அதில் ஏறிச் செல்லுங்கள்!’ என்றார்கள். அவர், ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே, இறைத்தூதர் அவர்களே?’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டாவது முறையில்’ அல்லது ‘மூன்றாவது முறையில்’ ‘இதில் ஏறிச் செல்லும்! உமக்குக் கேடுதான்’ என்றார்கள். Book :78