← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #6146
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ بَيْنَمَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي إِذْ أَصَابَهُ حَجَرٌ، فَعَثَرَ، فَدَمِيَتْ إِصْبَعُهُ، فَقَالَ: «هَلْ أَنْتِ إِلَّا إِصْبَعٌ دَمِيتِ … وَفِي سَبِيلِ اللَّهِ مَا لَقِيتِ»
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு போரின் போது) நடந்து கொண்டிருக்கையில் அவர்களுக்குக் (காலில்) கல் பட்டுவிட்டது. இதனால் அவர்களின் (கால்) விரலில் (காயமேற்பட்டு) இரத்தம் சொட்டியது. அப்போது அவர்கள், ‘நீ சொட்டுகிற ஒரு விரல்தானே! நீ பட்டதெல்லாம் இறைவழியில் தானே!’ என்று (ஈரடிச் சீர் பாடல் போன்ற வடிவில்) கூறினார்கள். Book :78