حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: سَمِعْتُ عُرْوَةَ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا
فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَذَكَرَ الحَدِيثَ
பாடம் : 4 அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான் (எனும் 96:4ஆவது இறைவசனம்). ஆயிஷா (ரலி) அறிவித்தார் நபி (ஸல்) அவர்கள் (ஹிராக் குகையிலிருந்து, கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்று கூறினார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்ட படி முழுதுவமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார். Book : 65