← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3642
அத்தியாயம்: 61
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا شَبِيبُ بْنُ غَرْقَدَةَ، قَالَ: سَمِعْتُ الحَيَّ يُحَدِّثُونَ، عَنْ عُرْوَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَعْطَاهُ دِينَارًا يَشْتَرِي لَهُ بِهِ شَاةً، فَاشْتَرَى لَهُ بِهِ شَاتَيْنِ، فَبَاعَ إِحْدَاهُمَا بِدِينَارٍ، وَجَاءَهُ بِدِينَارٍ وَشَاةٍ، فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِي بَيْعِهِ، وَكَانَ لَوِ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيهِ»، قَالَ سُفْيَانُ: كَانَ الحَسَنُ بْنُ عُمَارَةَ جَاءَنَا بِهَذَا الحَدِيثِ عَنْهُ، قَالَ: سَمِعَهُ شَبِيبٌ مِنْ عُرْوَةَ فَأَتَيْتُهُ، فَقَالَ شَبِيبٌ إِنِّي لَمْ أَسْمَعْهُ مِنْ عُرْوَةَ، قَالَ سَمِعْتُ الحَيَّ يُخْبِرُونَهُ عَنْهُ
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும், ஷபீப் பின் ஃகர்கதா அவர்கள் இந்தச் செய்தியை தனது குலத்தார்-ஊர்வாசிகளிடமிருந்து அறிவித்துள்ளார். இவர்கள் யார் என்பது பற்றி தெளிவு இல்லை என்பதால் தான் இமாம் ஷாஃபிஈ அவர்கள் இது சரியானதல்ல என்று கூறியுள்ளார். அல் கத்தாபீ, பிறப்பு ஹிஜ்ரி 319 இறப்பு ஹிஜ்ரி 388 வயது: 69 பைஹகீ, பிறப்பு ஹிஜ்ரி 384 இறப்பு ஹிஜ்ரி 458 வயது: 74 ஹைஸமீ ஆகியோர் இந்தச் செய்தியை முர்ஸல் என்றும் முன்கதிஃ -அறிவிப்பாளர்தொடரில் இடைமுறிவு ஏற்பட்ட செய்தி என்றும் கூறியுள்ளனர். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள், இந்தச் செய்தியை பதிவு செய்திருப்பதின் காரணம் இந்தச் செய்தியுடன் சேர்ந்துவரும் மற்றொரு செய்தியான “குதிரைகளின் நெற்றிகளில் மறுமை நாள் வரையிலும் நன்மை பிணைக்கப்பட்டுள்ளது’ என்பதை குறிப்பிடுவதுதான். புகாரியின் இந்தச் செய்திக்கு அடுத்ததாக இடம்பெறும் செய்திகளான புகாரி-3643 ஆகிய அனைத்தும் குதிரை பற்றிய செய்திகளாக இருப்பதை வைத்து இதைப் புரிந்துக் கொள்ளலாம். (இந்த விளக்கத்தை இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ, பிறப்பு ஹிஜ்ரி 562 இறப்பு ஹிஜ்ரி 628 வயது: 66 முன்திரீ ஆகியோர் குறிப்பிட்டிருப்பதை ஸைலஈ இமாம் தனது நஸபுர் ராயாவில் கூறியுள்ளார். நூல்: நஸபுர் ராயா-4/91-92) புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள், ஸுஃப்யான் அவர்களின் விளக்கத்தையும் சேர்த்திருப்பதை வைத்து இந்தச் செய்தி பலவீனம ் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாமின் நோக்கம் முன்கதிஃ முர்ஸலான செய்திகளை ஆதாரமாக ஏற்கலாம் என்பதல்ல என்பதை இப்னுல் கத்தான் விளக்கியுள்ளார். Favorite