حَدَّثَنَا الحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ، فَقَالَ: حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ
إِنَّ مُوسَى قَالَ لِفَتَاهُ: آتِنَا غَدَاءَنَا، (قَالَ أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الحُوتَ وَمَا أَنْسَانِيهِ إِلَّا الشَّيْطَانُ أَنْ أَذْكُرَهُ)، وَلَمْ يَجِدْ مُوسَى النَّصَبَ حَتَّى جَاوَزَ المَكَانَ الَّذِي أَمَرَ اللَّهُ بِهِ
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலை) அவர்கள் தம் பணியாளரிடம் (யூஷஉபின் நூன் (அலை) அவர்களிடம்) ‘நம்முடைய சிற்றுண்டியைக் கொண்டு வா’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்தே போய் விட்டேன். அதை ஷைத்தான் தான் எனக்கு மறந்து போகச் செய்துவிட்டான்’ ( திருக்குர்ஆன் 18:62 , 63) என்று கூறினார். அல்லாஹ் கட்டளையிட்ட (இரண்டு நதிகள் சங்கமிக்கும்) இடத்தைக் கடக்கிற வரை மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை. என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். Book :59