அத்தியாயம்: 56 பாடம்: 44
بَابٌ: الجِهَادُ مَاضٍ مَعَ البَرِّ وَالفَاجِرِ
لِقَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ»
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، حَدَّثَنَا عُرْوَةُ البَارِقِيُّ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
الخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الخَيْرُ إِلَى يَوْمِ القِيَامَةِ: الأَجْرُ وَالمَغْنَمُ
நல்லவர் மற்றும் கெட்டவரின் தலைமையின் கீழ் (மறுமைநாள் வரை) அறப்போர் நடந்து கொண்டிருக்கும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (அல்லாஹ்வின் பாதையில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவழியில் செலுத்தப்படும்) குதிரைகளின் நெற்றிகளில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த நன்மை யாதெனில் (அந்தக் குதிரையில் ஏறி அறப்போரிடுவதால் கிடைக்கும்) நற்கூலியும், போரில் கிடைக்கும் செல்வமும் ஆகும்.
அறிவிப்பவர்: உர்வா பின் அபுல்ஜஃத் அல்பாரிகீ (ரலி)