← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2815
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ «اصْطَبَحَ نَاسٌ الخَمْرَ يَوْمَ أُحُدٍ، ثُمَّ قُتِلُوا شُهَدَاءَ»، فَقِيلَ لِسُفْيَانَ: مِنْ آخِرِ ذَلِكَ اليَوْمِ؟ قَالَ: لَيْسَ هَذَا فِيهِ
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். உஹுதுப்போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘அந்த நாளின் இறுதியில் (அவர்கள் உயிர்த் தியாகிகளாகக் கொல்லப்பட்டார்கள்) என்றா (அறிவிக்கப்பட்டுள்ளது)?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘(‘அந்த நாளின் இறுதியில்’ என்ற) இந்த வாசகம் அறிவிப்பில் இல்லை’ என்று பதிலளித்தார். Book :56