← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2734
بَابُ الشُّرُوطِ فِي القَرْضِ وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ ذَكَرَ رَجُلًا سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ، أَنْ يُسْلِفَهُ أَلْفَ دِينَارٍ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى» وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، وَعَطَاءٌ: «إِذَا أَجَّلَهُ فِي القَرْضِ جَازَ»
பாடம் : 16 கடன் விஷயத்தில் விதிக்கப்படும் நிபந்தனைகள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் இஸ்ரவேலர்களில் ஒருவரிடம் தனக்கு ஆயிரம் தீனார்கள் கடன் தரும்படி கேட்டதாகவும் அந்த இஸ்ரவேலரும் காலக் கெடுவைக் குறிப்பிட்டு (அதற்குள் திருப்பிச் செலுத்தி விட வேண்டுமென்று நிபந்தனையிட்டு) அதை அவருக்குக் கொடுத்ததாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், கூறினார்கள். இப்னு உமர்(ரலி) மற்றும் அதாஉ(ரஹ்) ஆகிய இருவரும், ‘கடன் கொடுப்பவர் கடனைத் திருப்பிச் செலுத்த காலக் கெடுவைக் குறிப்பிட்டால் அது செல்லும்’ என்று கூறுகிறார்கள். Book : 54