بَابُ الشُّرُوطِ فِي الجِهَادِ وَالمُصَالَحَةِ مَعَ أَهْلِ الحَرْبِ وَكِتَابَةِ الشُّرُوطِ
حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، قَالَ: أَخْبَرَنِي الزُّهْرِيُّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ، يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا حَدِيثَ صَاحِبِهِ، قَالاَ:
خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الحُدَيْبِيَةِ حَتَّى إِذَا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ خَالِدَ بْنَ الوَلِيدِ بِالْغَمِيمِ فِي خَيْلٍ لِقُرَيْشٍ طَلِيعَةٌ، فَخُذُوا ذَاتَ اليَمِينِ» فَوَاللَّهِ مَا شَعَرَ بِهِمْ خَالِدٌ حَتَّى إِذَا هُمْ بِقَتَرَةِ الجَيْشِ، فَانْطَلَقَ يَرْكُضُ نَذِيرًا لِقُرَيْشٍ، وَسَارَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى إِذَا كَانَ بِالثَّنِيَّةِ الَّتِي يُهْبَطُ عَلَيْهِمْ مِنْهَا بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ، فَقَالَ النَّاسُ: حَلْ حَلْ فَأَلَحَّتْ، فَقَالُوا: خَلَأَتْ القَصْوَاءُ، خَلَأَتْ القَصْوَاءُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا خَلَأَتْ القَصْوَاءُ، وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ، وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الفِيلِ»، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لاَ يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا»، ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ، قَالَ: فَعَدَلَ عَنْهُمْ حَتَّى نَزَلَ بِأَقْصَى الحُدَيْبِيَةِ عَلَى ثَمَدٍ قَلِيلِ المَاءِ، يَتَبَرَّضُهُ النَّاسُ تَبَرُّضًا، فَلَمْ يُلَبِّثْهُ النَّاسُ حَتَّى نَزَحُوهُ وَشُكِيَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العَطَشُ، فَانْتَزَعَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ، ثُمَّ أَمَرَهُمْ أَنْ يَجْعَلُوهُ فِيهِ، فَوَاللَّهِ مَا زَالَ يَجِيشُ لَهُمْ بِالرِّيِّ حَتَّى صَدَرُوا عَنْهُ، فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ جَاءَ بُدَيْلُ بْنُ وَرْقَاءَ الخُزَاعِيُّ فِي نَفَرٍ مِنْ قَوْمِهِ مِنْ خُزَاعَةَ، وَكَانُوا عَيْبَةَ نُصْحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ تِهَامَةَ، فَقَالَ: إِنِّي تَرَكْتُ كَعْبَ بْنَ لُؤَيٍّ، وَعَامِرَ بْنَ لُؤَيٍّ نَزَلُوا أَعْدَادَ مِيَاهِ الحُدَيْبِيَةِ، وَمَعَهُمُ العُوذُ [ص:194] المَطَافِيلُ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ البَيْتِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّا لَمْ نَجِئْ لِقِتَالِ أَحَدٍ، وَلَكِنَّا جِئْنَا مُعْتَمِرِينَ، وَإِنَّ قُرَيْشًا قَدْ نَهِكَتْهُمُ الحَرْبُ، وَأَضَرَّتْ بِهِمْ، فَإِنْ شَاءُوا مَادَدْتُهُمْ مُدَّةً، وَيُخَلُّوا بَيْنِي وَبَيْنَ النَّاسِ، فَإِنْ أَظْهَرْ: فَإِنْ شَاءُوا أَنْ يَدْخُلُوا فِيمَا دَخَلَ فِيهِ النَّاسُ فَعَلُوا، وَإِلَّا فَقَدْ جَمُّوا، وَإِنْ هُمْ أَبَوْا، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَأُقَاتِلَنَّهُمْ عَلَى أَمْرِي هَذَا حَتَّى تَنْفَرِدَ سَالِفَتِي، وَلَيُنْفِذَنَّ اللَّهُ أَمْرَهُ “، فَقَالَ بُدَيْلٌ: سَأُبَلِّغُهُمْ مَا تَقُولُ، قَالَ: فَانْطَلَقَ حَتَّى أَتَى قُرَيْشًا، قَالَ: إِنَّا قَدْ جِئْنَاكُمْ مِنْ هَذَا الرَّجُلِ وَسَمِعْنَاهُ يَقُولُ قَوْلًا، فَإِنْ شِئْتُمْ أَنْ نَعْرِضَهُ عَلَيْكُمْ فَعَلْنَا، فَقَالَ سُفَهَاؤُهُمْ: لاَ حَاجَةَ لَنَا أَنْ تُخْبِرَنَا عَنْهُ بِشَيْءٍ، وَقَالَ ذَوُو الرَّأْيِ مِنْهُم
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகிய இருவரும் ஒருவர் சொன்னதை மற்றவர் உண்மைப்படுத்தியவாறு லி கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ‘‘காலித் பின் அல்வலீத், குறைஷியரின் குதிரைப் படையுடன் ‘அல்ஃகமீம்’ என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர்கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் அல்வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்றுவிடலாம்)” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம்கள் வருவதை காலித் அறியவில்லை. (குறைஷி குதிரைப் படையினர் முஸ்லிம்களின்) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய கரும் புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் அல்வலீத், குறைஷியரை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், (‘அல்மிரார்’ எனும்) மலைப் பாதைக்கு வந்தார்கள். அங்கிருந்துதான் குறைஷியரைப் போய்ச் சேர முடியும். அங்கு நபியவர்களின் ஊர்தி ஒட்டகம் மண்டியிட்டு அமர்ந்துகொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) யிஹல்ஹல்’ என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், யிகஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது, யிகஸ்வா’ பிடிவாதம் பிடிக்கிறது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. மாறாக, (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த (இறை)வனே அதையும் தடுத்துவைத்திருக் கின்றான்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘என் உயிர் யாரது கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களைக் கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் வழங்குவேன்” என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களைவிட்டுத் திரும்பி ஹுதைபியாவின் கோடியில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள். மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் எடுக்கலானார்கள். இறுதியில், அவர்கள் மீதி வைக்காமல் தண்ணீர் முழுவதையும் இறைத்து (அதைக் காலிசெய்து) விட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தாகம் எடுப்பதாக முறையிடப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி, அதைப் பள்ளத்தில் போடும்படி மக்களுக்கு உத்தரவிட் டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (பள்ளத்தில் அம்பைப் போட்டதும்) அதிலிருந்து அவர்களுக்காகத் தண்ணீர் பீறிட்டு வந்துகொண்டிருந்தது. அவர்கள் அங்கிருந்து புறப்படும்வரை (தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக்கொண்டிருந்தது). இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் அங்கு வந்தார். அவர்கள் யிதிஹாமா’வாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக் கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், ‘‘(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபியாவின் வற்றாத சுனைகளின் அருகே முகாமிட்டி ருக்க, அங்கே அவர்களை விட்டுவிட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் பால் தரும் தாய் ஒட்டகங்கள் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப்போகிறார்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நாம் யாருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக உம்ரா செய்வதற்காகத்தான் வந்திருக்கிறோம். குறைஷியர் அடிக்கடி போரிட்டுக் களைத்துப்போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுடன் குறிப்பிட்ட காலத்திற்குச் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே குறுக்கே நிற்க வேண்டாம். நான் வெற்றி பெறும்போது, அவர்கள் விரும்பினால் மக்களெல்லாரும் (விரும்பி) ஏற்றுக்கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே அவர்களும் இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு (போரிலிருந்து) ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்தால், என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகும்வரை அவர்களுடன் உறுதியாகப் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவான்” என்று கூறினார்கள். அப்போது புதைல், ‘‘நீங்கள் சொல் வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப் பேன்” என்று கூறிவிட்டு குறைஷியரிடம் சென்று, ‘‘நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட் டோம். அதை உங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்” என்று சொன்னார். அப்போது அவர்களிடையே இருந்த அறிவிலிகள், ‘‘அவரைக் குறித்து எங்க ளுக்கு நீங்கள் எதையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறினர். அவர்களில் கருத்து உடையோர், ‘‘அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்” என்று கூறினர். புதைல், ‘‘அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை அவர்களுக்கு எடுத்துரைத்தார். உடனே (அப்போது இறைமறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, ‘‘என் சமுதாயத்தாரே! நீங்கள் (என்) தந்தையைப் போன்றவர்கள் (என்மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தனர். உர்வா, ‘‘நான் உங்கள் மகனைப் போன்றவன் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (நீங்கள் எங்கள் நலம் நாடுபவர்தான்)” என்று பதிலளித்தனர். மேலும் அவர், ‘‘நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தனர். அப்போது உர்வா, ‘‘உக்காழ் (சந்தை)வாசிகளிடம் (போரில்) உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட)போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களி டம் கொண்டுவந்து நிறுத்தியதும் உங்களுக் குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘‘ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தனர். அப்போது அவர், ‘‘முஹம்மத், உங்கள்முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்லவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘‘அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்” என்று கூறினர். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார். நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, ‘‘முஹம்மதே! உங்கள் சமுதாயத்தாரின் கதையை அடியோடு முடித்துவிட எண்ணுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபியர் எவரேனும் தம் சமுதாயத்தாரை பூண்டோடு அழித்த