بَابُ النَّجْشِ، وَمَنْ قَالَ: «لاَ يَجُوزُ ذَلِكَ البَيْعُ»
وَقَالَ ابْنُ أَبِي أَوْفَى: النَّاجِشُ: آكِلُ رِبًا خَائِنٌ وَهُوَ خِدَاعٌ بَاطِلٌ لاَ يَحِلُّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الخَدِيعَةُ فِي النَّارِ، مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّجْشِ»
பாடம் : 60 வாங்கும் நோக்கமின்றி விலையை உயர்த்திவிடுவதற்காக (ஏலம் மற்றும் பிற பேரங்களின் போது) விலை அதிகமாகக் கேட்பது (நஜ்ஷ்). (மேற்கூறியபடி) மோசடியாக விலையை ஏற்றிவிடுவது செல்லாது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மோசடியாக விலையை உயர்த்திவிடுபவன் வட்டி உண்பவன் ஆவான்! இது மோசடி ஆகும்! செல்லாததும் அனுமதிக்கப்படாததும் ஆகும்! என்று இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். மோசடி செய்பவர் நரகத்தில் இருப்பார்! நமது கட்டளையில்லாத ஒரு காரியத்தை யாரேனும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது! என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்கள் மோசடியாக ஏலம் விடுவதைத் தடை செய்தார்கள். Book : 34