← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #214 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அத்தியாயம்: 4  பாடம்: 54
بَابُ الوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَمْرُو بْنُ عَامِرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاَةٍ» قُلْتُ: كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: يُجْزِئُ أَحَدَنَا الوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ https://sunnah.com/bukhari:214
உளூ முறிவதற்குரிய காரணம் (ஹதஸ்) ஏற்படாமலேயே (புதிதாக) உளூ செய்தல். ‘நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உளூச் செய்வார்கள்’ என அனஸ் (ரலி) கூறியபோது, ‘நீங்கள் எப்படிச் செய்வீர்கள்?’ என அனஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘உளூவை முறிக்கும் செயல்கள் நிகழாமலிருக்கும் போதெல்லாம் ஒரே உளூவே எங்களுக்குப் போதுமானதாகவே இருந்தது’ என்று அனஸ் (ரலி) கூறினார்’ இதை அம்ர் இப்னு ஆமிர் அறிவித்தார்.