بَابٌ: كَمْ يَجُوزُ الخِيَارُ
حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ نَافِعًا، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ
إِنَّ المُتَبَايِعَيْنِ بِالخِيَارِ فِي بَيْعِهِمَا مَا لَمْ يَتَفَرَّقَا، أَوْ يَكُونُ البَيْعُ خِيَارًا
قَالَ نَافِعٌ: وَكَانَ ابْنُ عُمَرَ
إِذَا اشْتَرَى شَيْئًا يُعْجِبُهُ فَارَقَ صَاحِبَهُ
பாடம் : 42 வியாபாரத்தை எவ்வளவு நாட்களில் முறித்துக் கொள்ளலாம்? இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘விற்பவரும் வாங்குபவரும் (வியாபாரம் பேசிய தலத்திலிருந்து) பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ள உரிமை படைத்தவர்களாவர்! ‘வியாபாரத்தை உத்தரவாத காலத்திற்குள் முறிக்கலாம்’ என முன்பே பேசிக் கொண்டால் முறித்துக் கொள்ளலாம்!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) தமக்கு விருப்பமான ஒரு பொருளை வாங்கினால் உடனே விற்றவரைப் பிரிந்து விடுவார் என்று நாஃபிவு கூறுகிறார். Book : 34