← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1839
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الحَكَمِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ وَقَصَتْ بِرَجُلٍ مُحْرِمٍ نَاقَتُهُ، فَقَتَلَتْهُ، فَأُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اغْسِلُوهُ، وَكَفِّنُوهُ، وَلاَ تُغَطُّوا  رَأْسَهُ، وَلاَ تُقَرِّبُوهُ طِيبًا، فَإِنَّهُ يُبْعَثُ يُهِلُّ»
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரின் ஒட்டகம் அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரின் உடல் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, ‘அவரைக் குளிப்பாட்டி கபனிடுங்கள்! அவரின் தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்) தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். Book :28