அத்தியாயம்: 28 பாடம்: 7
بَابُ مَا يَقْتُلُ المُحْرِمُ مِنَ الدَّوَابِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«خَمْسٌ مِنَ الدَّوَابِّ لَيْسَ عَلَى المُحْرِمِ فِي قَتْلِهِنَّ جُنَاحٌ»
இஹ்ராம் கட்டியவர் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும்! அவற்றை இஹ்ராம் அணிந்தவர் கொன்றால் அவரின் மீது குற்றமில்லை! (அவை காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்!) இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.