← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1754
بَابُ الطِّيبِ بَعْدَ رَمْيِ الجِمَارِ وَالحَلْقِ قَبْلَ الإِفَاضَةِ حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ القَاسِمِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ، وَكَانَ – أَفْضَلَ أَهْلِ زَمَانِهِ – يَقُولُ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، تَقُولُ «طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ هَاتَيْنِ، حِينَ أَحْرَمَ، وَلِحِلِّهِ حِينَ أَحَلَّ، قَبْلَ أَنْ يَطُوفَ، وَبَسَطَتْ يَدَيْهَا»
பாடம் : 143 கல்லெறிந்த பின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுஸ் ஸியாரத்திற்கு முன்பு தலை மழித்துக்கொள்வதும். காஸிம்(ரஹ்) அறிவித்தார். ஆயிஷா(ரலி) ‘நபி(ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிய நாடிய போதும், தவாஃபுஸ் ஸியாரத் செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல்லெறிந்துவிட்டு, தலை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டு விட்டிருந்த வேளையிலும், நான் அவர்களுக்கு என்னுடைய இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கிறேன்!’ எனக் கூறித் தம் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினார்கள். Book : 25