← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #1690
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، وَشُعْبَةُ قَالاَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا» ثَلاَثًا
அனஸ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தம் குர்பானி ஒட்டகத்தை இழுத்துச் செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அதில் ஏறிக் கொள்ளும்!’ என்றார்கள். அதற்கவர், ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே?’ என்றதும். ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!’ என்றார்கள். மீண்டும் அவர் ‘இது குர்பானி ஒட்டகமாயிற்றே!’ என்றதும் ‘(பரவாயில்லை) அதில் ஏறிக் கொள்ளும்!’ என மூன்றாம் முறையும் கூறினார்கள். Book :25