← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #565
196- بَابُ مَا جَاءَ فِي خُرُوجِ النِّسَاءِ إِلَى الْمَسْجِدِ حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ، وَلَكِنْ لِيَخْرُجْنَ وَهُنَّ تَفِلَاتٌ»
பாடம் : 196 பெண்கள் பள்ளிக்கு வருவது தொடர்பான பாடம். அல்லாஹ்வின் அடிமைகளான பெண்களை அல்லாஹ்வின் பள்ளிகளுக்கு வரவிடாது தடுக்காதீர்கள், எனினும் அவர்கள் நறுமண திரவியம் பூசாது வருவார்களாக! என்று அல்லாவின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.