حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا عُمَارَةُ بْنُ زَاذَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ مَلِكَ ذِي يَزَنَ «أَهْدَى إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةً أَخَذَهَا بِثَلَاثَةٍ وَثَلَاثِينَ بَعِيرًا، أَوْ ثَلَاثٍ وَثَلَاثِينَ نَاقَةً فَقَبِلَهَا»
Abu-Abu-Abu-Abu-Abu-
இந்த ஹதீஸில் வரும் அறிவிப்பாளர் உமாரா பின் ஸாதான் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸாகும். இந்த கருத்தில் வரும் அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இவர் வழியாக இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள், இவரின் சில ஹதீஸில் குளறுபடி உள்ளது என்றும், அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 அவர்கள், இவர் அனஸ் (ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கும் ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்றும், தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சித்துள்ளனர். (நூல்: மீஸானுல் இஃதிதால்-6024 ) நபி (ஸல்) அவர்களுக்கு உகைதிர் என்ற மன்னர் பட்டு ஆடையை அன்பளிப்பு செய்தார் என்று வரும் செய்தியே சரியானதாகும். பார்க்க-முஸ்லிம்- Favorite