← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3641
அத்தியாயம்: 24  பாடம்:
24 – كِتَاب الْعِلْمِ بَابُ الْحَثِّ عَلَى طَلَبِ الْعِلْمِ حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، سَمِعْتُ عَاصِمَ بْنَ رَجَاءِ بْنِ حَيْوَةَ، يُحَدِّثُ عَنْ دَاوُدَ بْنِ جَمِيلٍ، عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ، فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ: يَا أَبَا الدَّرْدَاءِ: إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي، أَنَّكَ تُحَدِّثُهُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ، قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ سَلَكَ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا سَلَكَ اللَّهُ بِهِ طَرِيقًا مِنْ طُرُقِ الْجَنَّةِ، وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ، وَإِنَّ الْعَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَوَاتِ، وَمَنْ فِي الْأَرْضِ، وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ، وَإِنَّ فَضْلَ الْعَالِمِ عَلَى الْعَابِدِ، كَفَضْلِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ، وَإِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوا دِينَارًا، وَلَا دِرْهَمًا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ» Abu-Abu-Abu-Abu-Abu- இந்தச் செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமாக இருந்தாலும் அபூதாவூத்-3642 இல் வரும் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும். இந்தச் செய்தியின் இறுதிப் பகுதியை புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் அறிவிப்பாளர்தொடர் இன்றி ஹதீஸ் பாடத்தலைப்பில் கூறியுள்ளார். (பார்க்க: புகாரி-68 ) (அபுத்தர்தா (ரலி) வழியாக வரும்) இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்தொடர்கள் குளறுபடியாக வந்துள்ளன என அப்துல்அளீம் அல்முன்திரீ அவர்கள் கூறியுள்ளார். 1 . இதில் அபுத்தர்தா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் கஸீர் பின் கைஸ் என்றும் கைஸ் பின் கஸீர் என்றும் வந்துள்ளது. 2 . மதீனாவிலிருந்து ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்தார் என கஸீர் பின் கைஸ் கூறியதாக ஒரு செய்தியில் வந்துள்ளது. கஸீர் பின் கைஸ் என்பவரே அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் (அவர் திமிஷ்கில் இருந்த போது) நான் மதீனாவிலிருந்து வருகிறேன் என்று கூறியதாக வேறு ஒரு செய்தியில் வந்துள்ளது. 3 . அபுத்தர்தா (ரலி) அவர்கள் மிஸ்ரில் இருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்தார் என்று வேறு ஒரு செய்தியில் வந்துள்ளது. 4 . சில அறிவிப்பாளர்தொடர்களில் ஆஸிம் பின் ரஜாவுக்கும், கஸீர் பின் கைஸ் என்பவருக்கும் இடையில் தாவூத் பின் ஜமீல் கூறப்பட்டுள்ளார். சிலவற்றில் விடப்பட்டுள்ளார். 5 . சில அறிவிப்பாளர் தொடர் கஸீர் பின் கைஸ் —> யஸீத் பின் ஸமுரா —> அபுத்தர்தா (ரலி) என்று வந்துள்ளது. சிலவை யஸீத் பின் ஸமுரா —> கஸீர் பின் கைஸ் —> அபுத்தர்தா (ரலி) என்று வந்துள்ளது. (நூல்: முக்தஸர் அபூதாவூத்-3641 ) இதற்கு காரணம் கஸீர் பின் கைஸ் என்பவர் தான். கஸீர் பின் கைஸ், கைஸ் பின் கஸீர் என்ற இந்த 2 பெயர்களில் கஸீர் பின் கைஸ் என்பதே சரி; முஹம்மது பின் யஸீத் அல்வாஸிதீ என்பவர் மட்டுமே கைஸ் பின் கஸீர் என்று கூறியுள்ளார்; இவரே பெயரைத் தவறாக கூறியுள்ளார்; மற்றவர்கள் கஸீர் பின் கைஸ் என்று கூறியுள்ளனர் என மிஸ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால்-24/149) முஹம்மது பின் யஸீத் அல்வாஸிதீ என்பவர் வழியாக கஸீர் பின் கைஸ்
கல்வி. கல்வி கற்பதற்கு வந்துள்ள ஆர்வமூட்டல். கஸீர் பின் கைஸ் என்பவர் கூறியதாவது: நான் திமிஷ்கி(டமாஸ்கஸி)லிருந்த ஒரு பள்ளிவாசலில் அபுத்தர்தா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் வந்து, அபுத்தர்தா (ரலி) அவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவிக்கிறீர்கள் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. (அதைக் கேட்பதற்காகவே நான்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மதீனா நகரத்திலிருந்து இங்கு வந்துள்ளேன். வேறு எந்தத் தேவைக்காகவும் நான் வரவில்லை என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதைகளில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான். வானவர்கள் கல்வியைத் தேடும் (மாணவர்) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளை கீழே வைக்கின்றனர். கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன. பக்தியாளரைவிட கல்வியாளருக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிட சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும். மார்க்க அறிஞர்கள் இறைத் தூதர்களின் வாரிசுகள் ஆவர். இறைத்தூதர்கள் பொற்காசுகளுக்கோ வெள்ளிக்காசுகளுக்கோ அவர்களை வாரிசுகளாக்கவில்லை. அவர்கள் இந்தக் கல்விக்குத்தான் வாரிசுகளாக்கியுள்ளனர். யார் இந்தக் கல்வியைப் பெற்றுக் கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.