← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2516
حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنِ ابْنِ مِكْرَزٍ، رَجُلٍ مِنْ أَهْلِ الشَّامِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي عَرَضًا مِنْ عَرَضِ الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَجْرَ لَهُ». فَأَعْظَمَ ذَلِكَ النَّاسُ، وَقَالُوا لِلرَّجُلِ: عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَعَلَّكَ لَمْ تُفَهِّمْهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي عَرَضًا مِنْ عَرَضِ الدُّنْيَا، فَقَالَ: «لَا أَجْرَ لَهُ». فَقَالُوا: لِلرَّجُلِ عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: الثَّالِثَةَ. فَقَالَ لَهُ: «لَا أَجْرَ لَهُ» Abu-Abu-Abu-Abu-Abu-
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள். இது மக்களுக்கு பெரும் சிரமமாக ஆனது. எனவே அவர்கள், அந்த மனிதரிடம், “நபி (ஸல்) அவர்களிடம் நீ விளக்கமாக கேட்கவில்லை போலும்! மீண்டும் அவர்களிடம் விளக்கமாக கேட்பீராக!” என்று கூறினர். எனவே அவர் மீண்டும், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள். மக்கள் மீண்டும் அவரிடம் விளக்கமாக கேட்குமாறு கூற மூன்றாவது தடவையும் அவர் கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள்.