حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي أَبِي حَفْصُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنِ الْحَجَّاجِ بْنِ الْحَجَّاجِ الْبَاهِلِيِّ، عَنْ عِسْلٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، نَحْوَ هَذِهِ الْقِصَّةِ لَمْ يَذْكُرِ الْإِزَارَ وَالْخَاتَمَ، فَقَالَ:
«مَا تَحْفَظُ مِنَ الْقُرْآنِ؟» قَالَ سُورَةَ الْبَقَرَةِ أَوِ الَّتِي تَلِيهَا، قَالَ: فَقُمْ فَعَلِّمْهَا عِشْرِينَ آيَةً، وَهِيَ امْرَأَتُكَ
Abu-Abu-Abu-Abu-Abu-
எண்-2111 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது. என்றாலும் இதில் கீழாடை பற்றியும், இரும்பு மோதிரத்தைப் பற்றியும் கூறப்படவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள செய்தி: உனக்கு எது மனனமாகவுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், ”சூரத்துல் பகரா மற்றும் அதற்கு அடுத்த அத்தியாயம்” என்று கூறினார். ”எழு! அவளுக்கு இருபது வசனங்களைக் கற்றுக்கொடு” அவள் உன் மனைவி (ஆகிவிடுவாள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)