அந்தப் பெண் பாடசாலையில் உணவு சமைத்துக் கொடுத்ததன் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்றால், அதற்காக அவர் வெளியே செல்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதுதான் அவருடைய உழைப்பாக இருக்குமாக இருந்தால், அவருக்கு வேறு வழி இல்லை என்று சொன்னால், சம்பாத்தியத்திற்காக அவர் வெளியே செல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்படுகிறது என்றால் அது இத்தாவை எந்த வகையிலும் பாதிக்காது.
காரணம், அந்தப் பெண்ணுடைய வாழ்க்கையும் சம்பாத்தியமும் அதில் தான் தங்கியிருக்கிறது. அல்லாஹ் எந்த ஓர் ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறிச் சிரமப்படுத்த மாட்டான் என்பதை நாம் பார்க்கிறோம். அதே நேரம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது போன்று தனியாக இத்தாவில் இருக்கக்கூடிய பெண்ணுக்கு வெளியே செல்வதற்கான பிரத்தியேக அனுமதியையும் வழங்கியுள்ளார்கள் என்ற செய்தியையும் நாம் ஹதீஸ்களில் பார்க்கிறோம்.
எனவே, சம்பாத்தியத்திற்காக அவர்கள் வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் அது இத்தாவை எந்த வகையிலும் பாதிக்காது.