ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அல்குர்ஆனிலே (சூரா பகராவில்) முடி இருப்பதாகவும், அதைக் கரைத்துக் குடித்தால் கொரோனா வைரஸுக்கு (Coronavirus) மருந்து என்று

குர்ஆன்

← முந்தையஅடுதது →
கேள்வி
அல்குர்ஆனிலே (சூரா பகராவில்) முடி இருப்பதாகவும், அதைக் கரைத்துக் குடித்தால் கொரோனா வைரஸுக்கு (Coronavirus) மருந்து என்றும் பரவும் செய்தி உண்மையா?
பதில்
பதில்:

கொரோனா வைரஸுக்கு குர்ஆனில் உள்ள முடியைக் கரைத்துக் குடித்தால் மருந்து கிடைக்கும் என்று பரப்பப்படும் செய்தி அப்பட்டமான ஒரு வதந்தியும், மூடநம்பிக்கையும், மாபெரும் அறியாமையுமாகும். இது அல்லாஹ் மீதும் அல்குர்ஆன் மீதும் இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யான செய்தியாகும்.

அல்குர்ஆன் (முஸ்ஹப்) என்பது நாம் அன்றாடம் கண்ணால் பார்த்து கைகளில் ஏந்தி ஓதுகின்ற ஒரு வேதமாகும். ஒருவர் குர்ஆனைத் திறந்து வைத்து ஓதும் போது, அவரது கண்ணிலிருந்தோ அல்லது தலையிலிருந்தோ ஒரு முடி உதிர்ந்து குர்ஆனில் விழுவதற்கு வாய்ப்புகள் நிறைய உள்ளன. முடி மட்டுமன்றி சில நேரங்களில் சிறு மண் துண்டுகளோ அல்லது காகிதத் துகள்களோ கூட அதில் இருக்கக் கூடும். இது ஒரு சாதாரணமான இயல்பான நிகழ்வாகும். இது எல்லா குர்ஆன் பிரதிகளிலும் இருக்கும் என்பது அல்ல; அதேபோல சூரா பகராவில் மட்டும்தான் இருக்கும் என்பதும் அல்ல.

குர்ஆனை மொபைல் போனில் (Mobile App) மட்டுமே ஓதிப் பழகியவர்களுக்கு அதில் முடி கிடைக்காது என்பதால், அவர்களுக்கு கொரோனாவுக்கு மருந்து இல்லை என்று சொல்வதா? எனவே, ஒரு குர்ஆனில் தற்செயலாக முடி இருப்பதைப் பார்த்துவிட்டு, ஏதோ குர்ஆனில் இருந்தே அந்த முடி வந்ததாக எண்ணி, சூரா பகராவின் தாள்களைக் கிழித்து அல்லது அந்த முடியைக் கரைத்துக் குடித்தால் நோய் குணமாகும் என்று எண்ணுவது மார்க்க ரீதியாக மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இது போன்ற கவர்ச்சிகரமான வதந்திகளைப் பரப்பி இறைவன் மீது இட்டுக்கட்டுகின்ற மாபெரும் பாவத்திலிருந்து முஸ்லிம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →