ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஸஹர் செய்யும் போது அதான் ஒசை கேட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட வேண்டுமா அல்லது சிறிது நேரம் சாப்பிட அனுமதியுள்ளதா?

ஸஹர் நோன்பு ஃபஜ்ர் அதான்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஸஹர் செய்யும் போது அதான் ஒசை கேட்டால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட வேண்டுமா அல்லது சிறிது நேரம் சாப்பிட அனுமதியுள்ளதா?
பதில்
பதில்:

ஸஹருடைய முடிவு நேரம் என்பது 'துலூஉல் ஃபஜ்ர்' எனப்படும் ஃபஜ்ருடைய உதய நேரமாகும். ஃபஜ்ருடைய அதான் என்பது ஸஹருடைய முடிவுக்குரிய அடையாளமாகும். பிலால் (ரழி) அவர்களின் அதான் தூங்குபவர்களை எழுப்புவதற்கானது என்பதால் அப்போது உண்ணலாம், ஆனால் இப்னு உம்மி மக்தூம் (ரழி) அவர்களின் அதான் ஃபஜ்ருடைய நேரத்தை குறிப்பதால் அப்போது உண்பதை நிறுத்திவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவேளை அதான் சொல்லப்படுகின்ற போது நாம் உணவை முடிக்கும் தருவாயில் இருந்து, அந்த ஃபஜ்ருடைய உதயம் நிகழ்வதற்குள் (அதாவது 1 அல்லது 1.5 நிமிடங்களுக்குள்) நமது உணவை முழுமையாக முடித்துவிட முடியும் என்ற நிலை இருந்தால், தாராளமாக அந்த உணவைச் சாப்பிட்டு முடித்துக் கொள்ளலாம். அல்லாஹு அக்பர் என்று அதான் ஆரம்பித்த உடனேயே வாயில் உள்ள உணவை துப்பிவிட வேண்டும் என்பதல்ல.

ஆனால், அதான் சொல்லப்பட்ட பிறகும் 5 அல்லது 10 நிமிடங்கள் நிதானமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ஃபஜ்ருடைய உதயத்தை முழுமையாகத் தாண்டிவிடுவோம் என்பதால் அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

← முந்தையஅடுதது →