ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நாம் ஸகாத் வழங்க விரும்பும் நபர் ஸகாத் பெறத் தகுதியானவர் என்பதை எவ்வாறு கணித்துக் கொள்வது? இலங்கையில் 30,000 ரூபாய் வரும

ஸகாத் தகுதி ஏழைகள் வருமானம் தேவை

← முந்தையஅடுதது →
கேள்வி
நாம் ஸகாத் வழங்க விரும்பும் நபர் ஸகாத் பெறத் தகுதியானவர் என்பதை எவ்வாறு கணித்துக் கொள்வது? இலங்கையில் 30,000 ரூபாய் வருமானத்திற்கு மேல் பெறுபவர்கள் ஸகாத் பெறத் தகுதியற்றவர்கள் என்று கூறுவது சரியா?
பதில்
பதில்:

ஒருவருடைய தகுதியை அவரது மாத வருமானத்தை (உ-ம்: 30,000 ரூபாய்) வைத்து மட்டும் அளவிடுவது முற்றிலும் தவறானது. ஒருவருக்கு 60,000 ரூபாய் வருமானம் கிடைக்கலாம், ஆனால் அவரது குடும்பப் பொறுப்புகள், கடன்கள் மற்றும் மருத்துவச் செலவுகள் ஒரு இலட்சத்தைத் தாண்டியதாக இருக்கும். ஆனால் இன்னொருவருக்கு 25,000 ரூபாய் வருமானமே போதுமானதாக இருக்கலாம். எனவே, வருமானத்தை வைத்து தேவையை வரையறை செய்வது பிழையான அணுகுமுறையாகும்.

ஒருவருடைய அன்றாட உணவுத் தேவை, மருத்துவத் தேவை, இருப்பிடம் மற்றும் பிள்ளைகளின் கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் எந்த அளவுக்கு நிரப்பமாக இருக்கின்றனவோ, அதைப் பொறுத்துதான் அவர் ஸகாத்திற்குத் தகுதியானவரா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அவர் வந்து தனது தேவைகளுக்காகவோ, கடனுக்காகவோ வாயைத் திறந்து ஸகாத் கேட்கிறார் என்றால், அவர் கேட்பது உண்மையா என்று விசாரித்து அவருக்கு நாம் தாராளமாக ஸகாத் கொடுக்கலாம். வருமானத் தொகையையோ அல்லது வீட்டில் ஒரு ஃபேன் இருப்பதையோ மட்டும் வைத்து ஸகாத் பெறுவதைத் தடுப்பது மார்க்க அடிப்படையற்றதாகும்.

← முந்தையஅடுதது →