கேள்வி
தொழுகையைத் தவறவிடும் அளவிற்குத் தூங்குவதன் மார்க்கச் சட்டம் என்ன?
பதில்
பதில்:
மார்க்க ரீதியான கடமைகளைத் தொழாமல் பிற்போடுகின்ற அளவிற்குத் தூக்கத்தில் தகாவுன் (பொடுபோக்கு / அலட்சியம்) காட்டக்கூடிய நிலைமை ஒருவருக்கு வருமாக இருந்தால், அந்தத் தூக்கம் மார்க்க ரீதியாகக் கடுமையான கண்டனத்திற்குரியதாகும். கடமையான தொழுகைகளை விட்டும் தூங்கக் கூடியவருக்கு நரகில் வழங்கப்படும் பயங்கரமான தண்டனைக் காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜிலே கண்டதாக ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஒருவர் திட்டமிட்டு அல்லாமல், சாதாரணமாகத் தூக்கத்தின் மிகைப்பால் தொழுகையை மறந்து தூங்கிவிட்டால், அவருக்கு எப்போது ஞாபகம் வருகிறதோ உடனே அவர் தொழுதுகொள்ள வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் விலக்களித்துள்ளார்கள். அதேபோல, இந்த நேரத்தில் தூங்கக் கூடாது என்று மார்க்கத்தில் எந்தக் குறிப்பிட்ட நேரமும் தடை செய்யப்படவில்லை.